HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Saturday, 29 October 2011

டாக்டர்களின் அலட்சியத்தால்... 17 குழந்தைகள் பரிதாப சாவு!

 கொல்கத்தா அரசு மருத்துமனையில் 12 குழந்தைகள் பலியான சோகம் மறைவதற்குள், மேலும் 17 குழந்தைகள் பலியானதாக திடுக்கி டும் தகவல் வெளியாகி யுள்ளது. மேற்கு வங்காள மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் பி.சி. ராய் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இங்கு, ஏராளமான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த மருத்துவமனையில் 2 நாளில் 21 குழந்தைகள் வரிசையாக இறந்தன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 25ம் தேதியும் இங்கு பல வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள் திடீரென ஒவ்வொன்றாக இறந்தன. அன்றைய தினம் மட்டும் 8 குழந்தைகள் இறந்தன. மறுநாள் தீபாவளி அன்று மேலும் 4 குழந்தைகள் இறந்தன. டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர்கள் கதறினர்.