HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label சாக்கு மூட்டை. Show all posts
Showing posts with label சாக்கு மூட்டை. Show all posts

Thursday, 24 May 2012

எனது லீலைகளை பொறுக்க முடியாத மனைவி.....ஊராட்சியின் கவுன்சிலராக.....



ஹோமோ செக்ஸ் வெறியில் சிறுவனை கொன்றேன்: கைதான சவரத்தொழிலாளி வாக்கு மூலம்                 
        பல்லடம் அருகேயுள்ள கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்.பனியன் தொழிலாளி. இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களது மகன் நவீன் (வயது 3 1/2). சண்முகப்பிரியா கம்மாளப்பட்டி ஊராட்சியின் கவுன்சிலராக இருந்து வருகிறார். அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்.

                  கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு நவீன் நின்று கொண்டிருந்தான். திடீரென்று அவனை காணவில்லை. இது குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

                 இந்த நிலையில் கம்மாளப்பட்டி பி.ஏ.பி. பெரிய வாய்க்காலில் தலையில் பலத்த காயத்துடன் நவீன் பிணமாக கிடந்தான். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

                 அமாவாசை தினத்தில் சிறுவன் கடத்தப்பட்டதும், உடல் கிடந்த பகுதியில் விபூதி, குங்குமம், மாந்திரீகத் தகடு போன்றவை கிடந்ததும் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பல்வேறு போலீசார் விசாரணை நடத்தினர். 

               இதைத்தொடர்ந்து சிறுவனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சவரத் தொழிலாளியான ரமேஷ் (27) என்பவர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரைப்பிடித்து விசாரித்த போது சிறுவன் நவீனை பாலியல் பலாத்காரம் (ஹோமோ செக்ஸ்) செய்து கல்லால் தாக்கி கொன்றதை ஒப்புக் கொண்டார். 

              போலீசார் அவரை கைது செய்தனர். ரமேஷ் போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:- 

              நவீன் வீடு அருகே தான் என் வீடு இருக்கிறது. பக்கத்து வீடு என்பதால் நவீன் அடிக்கடி என் வீட்டுக்கு வருவான்.அவனுக்கு பிஸ்கெட், சாக்லெட் கொடுப்பேன். அதனால் அவன் என் மீது பாசமாக இருப்பான். என்னிடம் இயல்பாகவே காம உணர்ச்சி அதிகமாக இருந்து வந்தது. 

             செக்ஸ் லீலைகளை பொறுக்க முடியாமல் எனது மனைவி பிரிந்து சென்று விட்டாள். இதனால் காம உணர்ச்சியால் அவதிப்பட்டு வந்தேன். சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்த போது நவீன் வந்தான். அவனுக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்தேன். அதை அவன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 

           அப்போது சிறுவன் என்றும் பாராமல் எனது காம புத்தி அவனிடம் பாலியல் பலாத்காரம் செய்ய தூண்டியது. ஹோமோ செக்சில் ஈடுபட முயன்ற போது நவீன் சத்தம் போட்டான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த குழவி கல்லால் அவனது தலையில் தாக்கினேன். இதில் நவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். 

              பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீட்டில் வைத்தேன். நவீனை காணவில்லை என்று அவனது பெற்றோர் தேடிய போது நானும் கூடவே சேர்ந்து தேடுவது போல நடித்தேன். இருட்டத்தொடங்கியதும் சாக்கு மூட்டையை எடுத்துச் சென்று பி.ஏ.பி. வாய்க்காலில் வீசி விட்டு வீட்டுக்கு திரும்பினேன். பின்னர் எதுவும் நடக்காதது போல் இருந்து கொண்டேன். 

           சந்தேகமடைந்த போலீசார் என்னை பிடித்து கைது செய்து விட்டனர். மேற்கண்டவாறு ரமேஷ் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.