HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Monday, 2 July 2012

ஆசிய கிரிக்கெட் இறு‌தி‌ப் போ‌ட்டி டை‌யி‌ல் முடி‌ந்தது - இந்தியா- பாகிஸ்தான் கூட்டு சாம்பியன்



                  இந்தியா, பாகிஸ்தான் இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் `டை'யில் முடிந்ததால் இரு அணிகளும் கோப்பையை கூட்டாக ப‌‌கி‌ர்‌ந்து கொ‌ண்டன.

             8 ‌அ‌ணிக‌ள் ப‌ங்கே‌ற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இறு‌தி‌ப் போ‌ட்டி‌யி‌ல்இந்தியாவும், பாகிஸ்தானும் மோ‌தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது.

        இந்த தொடரில் 2வது முறையாக சதம் அடித்த சமி அஸ்லாம் 134 ரன்களும், உமர் வாஹீத் 48 ரன்களும் விளாசினர். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ரஷ் களாரியா 10 ஓவர்கள் பந்து வீசி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

       அடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மனன் வோரா (11) ஏமாற்றினாலும், கேப்டன் உன்முக் சந்தும், சென்னையை சேர்ந்த பாபா அபாரஜித்தும் 2வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் கு‌வி‌த்தன‌ர். 

       அபாரஜித் 90 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருக்கு பிறகு வந்த விஜய் ஜோல் 11 ரன்களில் வெளியேற்றப்பட்டார். என்றாலும் டெல்லியை சேர்ந்த உன்முக் சந்த், நிலைத்து நின்று ஆடியதால், இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தென்பட்டது.

       கடைசி 6 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் பாகிஸ்தான் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் தனது கடைசி இரு ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு திடீரென நெருக்கடியை உருவாக்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன.

       50வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இசான் அதில் வீசினார். இதில் முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா உன்முக் சந்தின் (121) விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தை சந்தித்த களாரியா பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 

           இதையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், களாரியா (6) கேட்ச் ஆகி போனார். இதனால் திரிலிங்கான இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டை‌யி‌ல் முடிந்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 282 ரன்கள் சேர்த்தது.

        இதையடுத்து ஆசிய கோப்பையை இந்திய கேப்டன் உன்முக் சந்தும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் கூட்டாக பகிர்ந்து கொண்டனர். சதம் அடித்த சமி அஸ்லம், உன்முக் சந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

      அடுத்து, ஆகஸ்டு மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் களம் இறங்கின்றன.

Sunday, 3 June 2012

எதிர்காலத்தில் ராணுவத்தில் சேவை என்று கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோணி

                   நாட்டை காக்கும் ராணுவ சேவை என்பது மகத்தான சேவை. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேவை என்று கிரிக்கெட் கேப்டன் மகேந்திரசிங் டோணி கூறியுள்ளார்.

                     இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தில் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் சனிக்கிழமையன்று ஜம்மு-காஷ்மிரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று அங்கு வீரர்களை சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டதை டோணி உற்சாகத்துடன் கண்டு ரசித்தார். பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் உரையாற்றியதாவது,
 cricket now army the future ms dhoni
இப்போது உங்கள் முன் நிற்பதற்கு காரணம் கிரிக்கெட் தான். கிரிக்கெட் போட்டிகளால் தான் நான் இந்தளவுக்கு பிரபலமாக உள்ளேன்.இதற்கு பாதிப்பு வரும் வகையில் எப்போதும் செயல்பட மாட்டேன். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த பின், ராணுவத்துக்காக நிச்சயம், தீவிர சேவை செய்வேன். இதில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது.
   
போர்க்களத்தில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. தற்போது தான் இவர்களை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதுபோன்று எல்லைப் பகுதிக்கு வருவது இதுதான் முதன் முறை. இங்குள்ள அதிகாரிகளின் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர். இப்போது தான் இவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுவாக விளையாட்டுக்கு எவ்வித தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டு. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையில் போட்டிகளை மீண்டும் துவங்குவது முக்கியம். இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து, எப்போது விளையாடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல நாமும் அங்கு சென்று விளையாட வேண்டும். என்ன நடக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார். 

டோணிக்கு ராணுவ உடை மிடுக்கான தோற்றத்தை அளித்தாலும் அவருடைய நீண்ட தலைமுடி மற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்தி காட்டியது.

Sunday, 23 October 2011

4 பேர் சிறைபிடிக்க....ராணுவ ஹெலி...

இஸ்லாமாபாத்: மோசமான வானிலை ‌காரணமாக இந்திய ராணுவ ஹெலிகாப்டர் பாகிஸ்தானுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இந்திய பைலட் உள்பட 4 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று 4 ‌பேருடன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியான கார்கில் என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக இந்திய ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இது எல்லைப்பகுதியை மீறிய செயல் என பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய ஹெலிகாப்டரில் பைலட் உள்பட 4 பேரையும் சிறை பிடித்துள்ளனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாட்டை மீறி வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.