HAI FRIENDS PLEASE CLICK THE ADD.
Showing posts with label சி.பி.ஐ. Show all posts
Showing posts with label சி.பி.ஐ. Show all posts

Sunday, 3 June 2012

ஜெகன்மோகனிடம் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது....

               வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டார். 

              ஜெகன்மோகனை 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க ஆந்திர ஐகோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. 3-ந்தேதி (இன்று) முதல் 7-ந்தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சந்திரகுமார் உத்தரவிட்டு இருந்தார். 
 
             அதன்படி ஜெகன்மோகனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினார்கள். ஐதராபாத் சிறையில் இருக்கும் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள ஜெயில் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு காலை 10.40 மணிக்கு அழைத்து சென்றனர். 

             காலை 10.55 மணி அளவில் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி 2 வக்கீல்கள் விசாரணையின் போது உடன் இருந்தனர். மாலை 5 மணி வரை அவரிடம் விசாரணை நடைபெறும். 

           
 7-ந்தேதி வரை ஜெகனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். 8-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்படுவதற்கு முன்பு மே 25-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.