மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால்தான் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கு சென்று, அவரது உறவினர்கள், அருகில் உள்ளவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பது பற்றியும் விவரிக்கப்பட்டது. சென்னையில் இதுவரை 44 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அனைவரும் சிகிச்சைக்குபிறகு முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்.