HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 26 April 2012

44 பேருக்கு பன்றிக் காய்ச்சல்......சென்னையில்...

                பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தீவிரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சரியான சிசிச்சை அளித்து விரைவாக குணப்படுத்தும் முறைகள் ஆகியவை குறித்து கருத்தரங்கத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது வந்தால் அதுபற்றி உடனே மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

                 மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால்தான் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கு சென்று, அவரது உறவினர்கள், அருகில் உள்ளவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. 

                 பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பது பற்றியும் விவரிக்கப்பட்டது. சென்னையில் இதுவரை 44 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அனைவரும் சிகிச்சைக்குபிறகு முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். 

                  வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் பன்றிக்காய்ச்சல் பற்றி அறியும் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்குள் பன்றிக்காய்ச்சல் பாதித்தவர்களை கண்டறிய தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. 

பீசா!!! புற்று நோயை தடுக்கும்..இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்....


                 மனிதர்களின் உடலில் உள்ள பெருஞ்சுரப்பிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு பலர் பலியாகி வருகின்றனர். அதற்கு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிக்சை, ஹார்மோன் சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு அதற்கும் தனியாக சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. அதில் இருந்து தப்பிக்க தற்போது எளிதான புதிய வழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது பீசாவை அதிக அளவில் சாப்பிட்டால் சுரப்பி புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் பீசா மற்றும் இத்தாலி வகை உணவுகளில் ஒரீகானோ என்ற ரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. அது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது.
 
இந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய ஆராய்ச்சியாளர் சுப்ரியா பவேத்கர் தெரிவித்துள்ளார். லாங் ஐலேண்டு பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரியா பவேத்கரும் அவரது குழுவினரும் ஒரு ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்தனர்.
 
அப்போது ஒரீகானோ என்ற ரசாயன பொருள் சுரப்பி புற்றுநோயை குணபப்டுத்துவைத அறிந்தனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday 21 April 2012

HOT HOT HANSHIKA


    HAN......SHI...HA

ரூ.233 கோடி பணம் எப்படி....கை மாறியது


கலைஞர் தொலைக் காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து ரூ.233 கோடி கடன் பெறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு பெறுவதற்காகவே ஸ்வான் டெலிகாம் நிறுவனம், இந்த அளவு பணத்தை கலைஞர் டி.வி.க்கு கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

ஆனால் ரூ.233 கோடி பணம், கடனாகப் பெற்றது என்றும், அந்த கடன் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கலைஞர் தொலைக்காட்சி விளக்கம் அளித்தது.

கலைஞர் தொலைக் காட்சியில் கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீத பங்குகள் உள்ளன. எனவே ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பண பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தினர்.

சி.பி.ஐ. வழக்கில் கைதான கனிமொழி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் தற்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கனிமொழியிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறார்கள். ரூ.233 கோடி பணம் எப்படி, எந்த அடிப்படையில் கை மாறியது என்ற விசாரணையை அமலாக்கப்பிரிவு ஏற்கனவே நடத்தி விட்டது.

வங்கி கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வருமாறு கனிமொழி எம்.பிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 26-ந் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் 26-ந் தேதி கனிமொழி கண்டிப்பாக அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றில்லை. அவரது பிரதிநிதி ஆஜரானால் கூட போதுமானது. அமலாக்கப்பிரிவின் சம்மனை ஏற்று கனிமொழி தனது வங்கி கணக்குகள், கலைஞர் டி.வி.யின் வங்கிக் கணக்குகள் மற்றும் கடன் பணபரிமாற்றத்துக்கான வங்கி கணக்கு விவரங்களை அமலாக்கப்பிரிவிடம் தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் கனிமொயிடம் அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கும்.

தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால் கனிமொழி அதில் பங்கேற்று வருகிறார். எனவே அடுத்த மாதம் (மே) 3-வது வாரம் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு கனிமொழியிடம் அமலாக்கப்பரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கனிமொழி தவிர கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளளது. இதற்கிடையே சட்ட விரோத பணப் பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அமலாக்கப்பிரிவு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

அந்த சட்டத்தின் 4-வது பிரிவின் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கலைஞர் டி.வி. பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தற்போது தான் முதன்முதலாக வழக்கு பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.       

Tuesday 10 April 2012

System Administrator privileges.....


    The term "system administrator" may also be used to describe a security privilege which is assigned to a user or users of a specific computer, server, network or other IT System.

The Administrator level of system access permits that user to gain access to, and perform high level configuration features of the system.

This user privilege level is more commonly referred to within a computer or IT system as "administrator" (without the epithet "system"). It may also be called superuser or root.

For example a computer may have a user named "Administrator" or "Root" which has a security level sufficient to install software, or give other users access to the system. Alternatively a user of a system may be assigned to an "Administrators" group, membership of which grants them the same privilege as the Administrator user. These users may be referred to as System Administrators, referring only to the system privilege level, rather than the job function....

For security reasons, the name of an Administrator user or Administrators security group is often changed locally so that it is less easy to guess, in order to reduce system vulnerability to access by hackers.