HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 31 May 2012

இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் இறக்கின்றனர்.

                         தமிழகத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா, மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவை மனிதர்களின் உயிர்களை பறிக்கும் பொருட்களாகும். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உலக அளவில் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் இறக்கின்றனர்.

                       புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்க மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகளை பயன்படுத்தி தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, கைனி உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்ய வேண்டும். மக்களின் நலன் காப்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
 
                     ஆனால் மக்களின் நலன் கருதி புகையிலை பயன்பாட்டை தடுக்க வேண்டிய காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற அரசுத்துறைகள் மூலமாகவே புகையிலை பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது.

              
   


                    நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசுத்துறையினருடன் புகையிலை நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு விளம்பரம் செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பின்லேடன் தங்கி இருந்த தகவல் கொடுத்த டாக்டர் சஷில் அப்ரிடி...

                     பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர். அங்கு பின்லேடன் தங்கி இருந்த தகவல் பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் சஷில் அப்ரிடி மூலம் தான் அமெரிக்காவுக்கு தெரியவந்தது.
               எனவே அவரை அமெரிக்கா வெகுவாக பாராட்டி, கருணை காட்டி விடுதலை செய்ய பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது.  பின்லேடனை காட்டிக் கொடுத்த வழக்கில் ஜெயிலில் இருக்கும் டாக்டரை கொல்ல தீவிரவாதிகள் சதி 

             ஆனால் பாகிஸ்தான் கோர்ட்டில் அப்ரிடி மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டு 33 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். தற்போது அவர் பெஷாவர் ஜெயிலில் காவலில் இருக்கிறார்.
            இதற்கிடையில் தண்டனை அடைந்த டாக்டர் அப்ரிடியின் மீது லஞ்ச-ஊழல் புகார்கள், பெண்களுடன் முறைகேடான பழக்கம், சித்ரவதை, திருட்டு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

           அதுமட்டுமின்றி காயம் அடைந்த தீவிரவாதிகளுக்கும் அவர் ரகசியமாக சிகிச்சை அளித்தவர் என்றும் கூறுகிறார்கள். அப்ரிடிக்கும், அவரது குடும்பத்துக்கும் அமெரிக்கா தஞ்சம் கொடுக்க முன்வந்ததாகவும், ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

           இந்நிலையில் பாகிஸ்தானின் உளவுத்துறையின் சார்பில், உள்துறைக்கு ஒரு எச்சரிக்கை தகவல் கொடுத்துள்ளனர். அதில் சிறையில் இருக்கும் டாக்டர் அப்ரிடியின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருக்கிறது.
           தீவிரவாதிகள் அவரை கடத்தி செல்ல முயற்சி செய்யலாம் அல்லது விஷம் வைத்து கொலை செய்யலாம் என கூறப்பட்டு இருக்கிறது. எனவே சிறைச்சாலைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதா? அவரை வேறு சிறைக்கு மாற்றலாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.


labels: தீவிரவாதிகள்,டாக்டர்,அமெரிக்கா, பின்லேடன்.

டெங்கு காய்ச்சலுக்கு...பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

                                 நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியானது. இதையடுத்து பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. 
                                சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாக கூறப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சையளித்த டாக்டர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
                          நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பரவியது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

                 நெல்லை அரசு மருத்துவமனை டெங்கு தனிவார்டுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென் மாவட்டங்களில் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 50 பேர் வரை பலியாகி உள்ளனர். 
                        இந்நிலையில் நெல்லை மாவட்டம் மேலப்புளியங்குடி அருந்ததியர் காலனியை சேர்ந்த ரவீந்திரன் என்பவரது ஒன்றரை வயது மகன் ஹரிபிரசாத் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த ஒருவாரத்துக்கு முன்பு பாளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். 
                     அங்கு அவனது உடல்நிலை மோசமானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று மாலை நெல்லை அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவன் நேற்றிரவு இறந்தான். 

                     இதனால் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே களக்காடு ஜெ.ஜெ.நகர் மேல காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பையா மகள் ஆயிஷாபானு (13) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். 
               இந்த சிறுமி டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? என்பது குறித்து அறிய அவரது ரத்தமாதிரியை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

டாக்டர்களிடம் விசாரணை

                 சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் காசிநாதன். கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ளார். இவரது மகள் மஞ்சுளா (30). காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மஞ்சுளா, கடந்த 24ம் தேதி, அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
                           அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மஞ்சள் காமாலை, சிறுநீர் தொற்று போன்றவற்றுடன் அதிக அளவு ரத்தபோக்கும் இருந்ததாக கூறி சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மஞ்சுளா இறந்தார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

                      இந்நிலையில் அவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்துசென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், மஞ்சுளாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


labels:கீழ்பாக்கம்,ஹரிபிரசாத்,நெல்லை,

Tuesday 29 May 2012

சகுனியின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.

                               







                                                                   ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் கார்த்தியின் அடுத்தப் படமான 'சகுனி' அஜீத் படத்திற்கு நிகராக வியாபாரம் ஆகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கார்த்தியின் இப்படமும் ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
                                                                   அறிமுக இயக்குநர் சங்கர் தயாள், இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை இந்திய மொழிகளில், எந்த மொழியிகளிலும் எடுக்ககூடிய அளவுக்கு அமைந்திருக்கிறதாம்.



                                                  ஜி.வி. பிரகாஷ் குமார், இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைக்கும் அளவுக்கு இனியமையான பாடல்களாக வந்திருக்கிறதாம். 


                                                                 அதை ரசிகர்கள் கேட்பதற்கு இன்னும் சில நாட்கள் பொருத்திருக்க வேண்டும். ஆம், சகுனியின் பாடல் வெளியீட்டு விழா வரும் மே 31ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறுகிறது.

                                                                   பிரகாஷ்ராஜ், சந்தானம், ராதிகா, ரோஜா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. ரஜினி, சூர்யா படங்களை அடுத்து மூன்றாவது இடத்தில் கார்த்தி, தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பல கோடி ரூபாய் விலை கொடுத்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஸ்ரீ சாய் கணேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. (டிஎன்எஸ்)

டூயட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய படம் 'கெளரவம்'.



                                                                         பிரகாஷ்ராஜ், தனது டூயட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய படம் 'கெளரவம்'. இப்படத்தை ராதாமோகன் இயக்குகிறார்.
 பிரகாஷ்ராஜ் தயாரிப்பில், ராதா மோகன் இயக்கும் 'கெளரவம்' 
                                                                      பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் 'அழகிய தீயே', 'மொழி', 'பயணம்', 'அபியும் நானும்' ஆகியப் படங்களை இயக்கிய ராதாமோகன், ஐந்தாவதாக இயக்கும் படம் 'கெளரவம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகனும், தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனின் தம்பியுமான அல்லு சிரிஷ், ஹீரோவாக அறிமுகமாகிறார். 



                                                                     இதில் ஹீரோயினாக ஹிந்தியில் சமீபத்தில் வெளியான 'விக்கி டோனர்' படத்தில் நடித்த யாமி கெளதம் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நாசர், குமரவேல், ஸ்ரீ சரண் மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

                                                                எஸ்.எஸ்.தமன் இசைமைக்கும் இப்படத்திற்கு விஜி வசனம் எழுதுகிறார். ப்ரித்தா ஒளிப்பதிவு செய்கிறார். கே.கதிர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

                                                             இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று மைசூரில் துவங்குகிறது. (டிஎன்எஸ்)

வயசுபுள்ள நீயெனக்கு...கவிதையால கற்பழிக்க எனக்குத் தெரியாது...


வார்த்தையில
விரசம் வச்சு
பார்க்கச்சொல்லி
நான் கொடுத்தேன்...
பாத்துபுட்டு
ரெண்டுநாளா
பரிதவிக்க வச்சீயே...
வார்த்தையொன்றும்
பேசவில்லை
மௌனத்தால
கொன்னுபுட்டே...

அப்புறமா கதைக்கயில
"வார்த்தையால வர்ணிச்சு
கன்னி களிச்சுபுட்ட..."
என்று நீ சொல்லியத
நெஞ்சுக்குள்ள வச்சிருக்கன்...
எக்குதப்பா எழுதிபுட்ட
வருத்தத்தில நானிருக்க
வார்த்தையொண்டு
சொன்னாயே
வயசுபுள்ள நீயெனக்கு...
வாக்கபட்ட சந்தோஷத்த
தந்தவார்த்த இதுதானோ
என் செல்லத்தங்கமே...
"கவிதையால கற்பழிக்க
எனக்குத் தெரியாது...
தெரிஞ்சிருந்தா
புள்ள இருக்கும்
இன்னேரம்
உன் வயித்தில..."

காதல் கவிதைகள். சிந்தை நிறைந்த சிந்தனையை சிதறாமல் மூடிவைத்து

அந்திப் பொழுதினிலே
ஆர்ப்பரிக்கும் அலைக்கரையில்
அமைதியாக நானிருந்து   
நாணியிருக்கும் உன்முகத்தை  
பார்த்துரசிக்க ஆசை கொண்டேன்...

சிந்தை நிறைந்த சிந்தனையை
சிதறாமல் மூடிவைத்து
சிலையாக எப்படியுன்னால்
சிலநேரம் நிற்கமுடிகிறது...?
எத்தனைமுறை முயற்சித்தும்
என்னால்மட்டும் முடியவில்லை,
ஓயாத அலையோசைபோல்
மனதோரம் சங்கீதம் எப்போதும்
இனிமையாய் கேட்குதடி...!

அலைமோதும் பாறைதனில்
ஈரக் கசிவுகள் கல்லின் மேலிருக்கும்,
என் பாசக் கனிவுகள் உன் உள்ளத்தில்
உளிகொண்டு செதுக்கப்பட்டிருக்கும்...!
சிறுபிள்ளைத்தனமான உன்பேச்சை
என் மூச்சோடு சேர்த்துவைத்து
சுவாசித்து சுவை அறிவேன்...
அதை அறிந்திருக்கும் நீகூட
உன்பேச்சை சிலநேரம்
சிக்கனமாய் உதிர்ப்பாயே...
என் உள்ளத்தை உசுப்பிப் பார்ப்பதில்
உனக்கு அவ்வளவு பிரியமா...?

கடலின் ஆழத்தை அறிவதற்கு
முடியாது முடமாகிய கோவத்தில்
கரையேறி கல்தனில் தலைமோதிய
ஆர்ப்பரிக்கும் அலையோசை
என்காதில் சொல்வதென்னவோ
உன்மன ஆழத்தையாவது அறிந்துவா
என்றுதான் எண்ணுகின்றேன்...

செறிந்த அன்பதனை பரிவாக உன்மீது
பவளமாய் பதித்திருக்கேன்...
புரிந்தென்னை நேசிக்கிறாய்,
உள்மனது தவிக்குதடி செல்லமே
எப்போதும் என்னோடு சேர்ந்துவா
சொர்க்கங்கள் பலவற்றை
கட்டி நாம் வாழவேண்டுமடி...!

நான் சென்னை பொண்ணு, எனது ஆதரவு எப்போதும் சென்னை

                                         சென்னையில் நடந்த ஐ.பி.எல்., சீசன்-5 போட்டியின் இறுதி ஆட்டத்தில், கோல்கட்டா அணி பிரமுகர்களுடன் நடிகை த்ரிஷா அமர்ந்து இருந்ததால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.                    


                                       கடந்த ஒன்றரை மாத காலமாக இந்தியா முழுக்க பரவிக்கிடந்த ஐ.பி.எல்., ஜூரம் இருதினங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது. இறுதி‌ப்போட்டியில் சென்னை அணியும் - கோல்கட்டா அணியும் மோதினர். 


                                   சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் இறுதிஆட்டத்தில் கோல்கட்டா அணி கோப்பையை வென்று முதன்முறையாக ஐ.பி.எல்., சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இப்போட்டியை காண பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட திர‌ை நட்சத்திரங்கள் வந்திருந்தனர். 


                                   இப்போட்டியை த்ரிஷாவும் காண வந்திருந்தார். இதனால் த்ரிஷாவுக்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது போட்டியின் போது அவர் கோல்கட்டா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் அருகில் உட்கார்ந்து இருந்தார். இதனால் த்ரிஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சென்னை அணி போட்டியில் தோற்றதும் அவர் மீதான கோபம் இன்னும் அதிகரிக்க அவரை வசைப்பாடி இணையதளங்களில் ஏராளமான பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 

                         இந்தவிஷயம் பற்றி கேள்விப்பட்ட த்ரிஷா தடாலடியாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் நான் சென்னை பொண்ணு, எனது ஆதரவு எப்போதும் சென்னை அணிக்கு தான். அன்றைய தினம் என்னுடைய நெருங்கிய தோழி சபீனாகான் போட்டியை காண வந்திருந்தார். அதனால் அவர் பக்கத்தில் அமர வேண்டிய சூழ்நிலை. இதை ரசிகர்கள் பெரிதாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். 

Friday 25 May 2012

இல்லறத்தில் சந்தோஷம் பொங்க.... அரவணைப்பு...."I LOVE YOU" ..


                             திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள்  சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான்.
  
              மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற  பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.


                  ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய  திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால்  நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.
 
               பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. (ஆண்களை மட்டும் குறை சொல்லவில்லை). கணவனது  குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை  அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது. 


              மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர்வீட்டார் கூறும் பொய்கள்தான் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.

           இதே‌போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண்,  ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம்  ‌முக்கிய காரணியாக இருக்கின்றன.


பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்


                            பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க  வேண்டும். 


                            இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே (கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை  இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி  தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான். 
விட்டு கொடுங்கள்
       
                   இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து  கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம்  வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். 


               இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது  வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும்.


                 நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை,  நிதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. 


             ஆனால் சிலர்  விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது. 
ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து  கொள்கிறேன்.
அன்பு / அரவணைப்பு


                ஒரு நாளைக்கு ஒரு முறையாவது "I LOVE YOU" சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள்,  அதற்க்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில  ரொமான்ஸ்களை செய்யுங்கள்.
       
           இல்லற சந்தோஷம் பொங்க 
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

வரும் 27 ம் தேதி நடக்கும் பைனலில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை.........

                                   சென்னை M A சிதம்பரம்   ஸ்டேடியத்தில், டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ்  முதலில் பந்து வீச தீர்மானித்தது. 
           
                     இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. 

                சென்னை அணியில் முரளி விஜய் 58 பந்துகளில் 113 ரன்களும், ரெய்னா 17 பந்துகளில் 27 ரன்களும்,டோனி 10 பந்துகளில் 23 ரன்களும், பிராவோ 12 பந்துகளில் 33* ரன்களும்  குவித்தனர். டெல்லி அணியில் வருண் ஆரோன் 4 ஓவர்கள் வீசி 63 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
   
                   223  ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி, சென்னை அணியின் நேர்த்தியான பந்தவீச்சால் 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது. 


               இமாலய இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு துவக்கமே மோசமாக  அமைந்தது. டேவிட் வார்னர்(3 ), சேவாக்(1 ) எடுத்து ஏமாற்றினார், ஜெயவர்த்தனே 37 பந்துகளில் 55 ரன்களும், ராஸ் டெய்லர் 14 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர்.


                சென்னை அணியின் அஸ்வின் 3.5 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், ஜக்காத்தி 4 ஓவர்களில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும்,


               ஹில்பன்ஹாஸ் 3 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்களையும், ஆல்பி மோர்கல் 3 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்களையும், பிராவோ 3 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும், வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்/


       .இந்த வெற்றியின் மூலம் பைனலுக்கு முன்னேறியது சென்னை,பரிதாபமாக  வெளியேறியது டெல்லி. வரும் 27 ம் தேதி நடக்கும் பைனலில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது  சென்னை. 


labels: ஹில்பன்ஹாஸ்,  ரன்,சென்னை 

Thursday 24 May 2012

பேஸ்புக்........ கலந்தார் 'உலகநாயகன்'

                  இதன் முதல் படியாக, பேஸ்புக்கில் தனி பக்கம் தொடங்கியுள்ளார் அவர்.

                 இதுகுறித்து அவர் கூறிகையில், "இன்றைய இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கவும், சினிமா உலகினருடன் கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளவும் வசதியாக இருப்பதால், நானும் பேஸ்புக்கில் இணைய முடிவெடுத்துள்ளேன். நிறைய இளைஞர்கள் இதில் உள்ளனர். குறிப்பாக எனது ரசிகர்கள் கணிசமாக உள்ளனர். திரையுலகின் புதிய போக்குகள் குறித்து இதில் அப்டேட் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

                 
     அதேநேரம் எனது மய்யம் இதழ் மூலமும் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளேன். பேஸ்புக் என்பதை ஒரு கூடுதல் வசதியாகத்தான் பார்க்கிறேன். எனக்கு மய்யம்தான் பிரதான ஊடகம்," என்றார்.


                  சமூக இணையதளங்கள் அதிக அளவு இளைஞர்களை ஈர்த்து வருவதால், தானும் அந்த கூட்டத்தில் ஒருவராக மாறியுள்ளார்,