HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 18 December 2011

Russia's love affair with Raj Kapoor continues......


  
The Prime Minister and his wife Gursharan Kaur were entertained by two hit numbers from Raj Kapoor-starrer films on Friday rendered by the orchestra.
Singh and his wife were touched by the songs, whose music were composed by Shankar-Jaikishan duo, and went up to the orchestra and complimented them.
The orchestra played "Main Awara Hoon" from the 1951 movie "Awara", which was the most popular film in the erstwhile Soviet Union, and "Jeena Yahan Marna Yahan" from "Mera Naam Joker" (1970) that has in its cast Russian actress Kseniya Ryabinkina.
Raj Kapoor and films featuring him had been a huge draw in the Soviet Union and their popularity continues unebbed in Russia too.

tags:raj Kapoor.  

ஓரின சேர்க்கை............ எய்ட்ஸ் நோயால் பாதிப்பு?..

 செக்ஸ் தொழிலாளர்களை விட, ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. 
     கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் புதிதாக 1.2 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7.3 சதவீதம் பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள். நோயால் பாதித்த பெண் செக்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 4.94 சதவீதமாக குறைந்துள்ளது.

 கடந்த 2000 ஆண்டில் மொத்தம் 2.7 லட்சம் பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 11% பேர் பெண் செக்ஸ் தொழிலாளர்கள். அப்போது, 
நோய் பாதித்த ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாக இருந்தது. பொதுவாக எய்ட்ஸ் நோயால் ஆண்கள் பாதிக்கப்படுவது குறைவாக உள்ள ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

   Ôசெக்ஸ் தொழிலாளர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், நாட்டில் 25 லட்சம் ஓரின சேர்க்கையாளர்கள் உள்ள நிலையில், இப்பிரிவினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறதுÕ என இக்குழுவின் தலை வரும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறை செயலாளருமான சயன் சட்டர்ஜி தெரிவித் தார். இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இப்பிரச்னையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிகிறது.


tagsHIV,sex,

செல்போனில் ஆபாசமாக பேசி.....

கோவை அருகேயுள்ள ஆனைகட்டியை சேர்ந்தவர்  மோகனா (56).  கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். தாராபுரம் அமராவதி சிலை அருகே வாடகை வீட்டில் மோகனா குடியிருந்தார். 
 பொள்ளாச்சி சாலையிலுள்ள ஆர்.கே.ஆர் நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி சாலை அருகே உடலில் வெட்டுக் காயங்களுடன் மோகனா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் மோகனா வீட்டருகே வசிக்கும் ராஜாராம் என்பவர்  தாராபுரம் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
பியூட்டி பார்லர் அருகே வசித்துவந்த ராஜாராமுக் கும் (29), மோகனாவுக்கும் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜாராம் திருமணமானவர். மோகனாவுடன் அவ்வப்போது செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதை மோகனா தனது செல்போனில் பதிவு செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம்  கடந்த 12ம் தேதி பணம் தருவதாக மோகனா அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


tags:kovai, பியூட்டி பார்லர்,

Thursday 15 December 2011

டாக்டர் ராணி.... மோசடி செய்தவர்?



டாக்டர் ராணி, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரில் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பரஞ்சோதி தற்போது நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். 

நேற்று இந்த வழக்கு தொடர்பாக டாக்டர் ராணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், “கடந்த 2005&2011 கால கட்டங்களில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த பரஞ்சோதியின் காரிலேயே சட்டமன்றத்திற்கும், தலைமை செயலகத்திற்கும் சென்று வந்தது, பரஞ்சோதி வரமுடியாத காலகட்டங்களில் ராணி தலைமை செயலகத்திற்கு செல்ல வசதியாக அவரது காருக்கு சட்டபேரவை வாகன அனுமதி சீட்டு வாங்கிக்கொடுத்தது போன்ற பல தகவல்களை போலீசிடம் கூறினார். 

டாக்டர் ராணி கடந்த 2001, 2011ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ளதாக  குறிப்பிட்டு அதற்குரிய ஆதாரத்தை போலீசில் கொடுத்துள்ளார். மேலும், பரஞ்சோதி எழுதிக்கொடுத்த உறுதிமொழி பத்திரங்கள், காருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டபேரவை வாகன அனுமதி சீட்டு நகல்கள், அதிமுக உறுப்பினர் அட்டை நகல் உள்ளிட்ட பலவற்றையும் ஆதாரமாக அளித்துள்ளார்.

பரஞ்சோதி எழுதிக் கொடுத்த உறுதிமொழி பத்திரம்: 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி சென்னை மாவட்டம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் உன்னுடைய கழுத்தில் தாலி கட்டி 2வது மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இனி வாழ்நாள் முழுவதும் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்றும் உன்னை விட்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் பிரியமாட்டேன் என்றும் மீண்டும் எனது முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

labels:police,doctor,

Tuesday 13 December 2011

முகாமுக்கு சென்ற 37 யானை.....


Asian elephantமுதுமலை யானைகள் சிறப்பு முகாமுக்கு சென்ற 37 யானைகளுக்கும், மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதுமலை தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு சிறப்பு முகாம் நாளை துவங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளை, இம்முகாமுக்கு லாரிகளில் கொண்டு சென்றனர். மேட்டுப்பாளையம் வனத்துறை டிப்போவில், இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து "சிறப்பு நலவாழ்வு முகாமை' அமைத்திருந்தது. முகாமுக்கு சென்று 37 யானைகளுக்கும் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். யானையுடன் வந்த பாகன்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரவு ஓய்வுக்கு பின் அதிகாலை 4.50 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக தெப்பக்காட்டுக்கு யானைகளை அனுப்பினர்.

labels:elephant,camp,mettupalaiyam.

Monday 5 December 2011

aamir khan baby.


saying: "It gives us the greatest joy to share with you the good news of the birth of our baby boy. This baby is especially dear to us because he was born to us after a long wait and some difficulty."
This is Kiran Rao's first baby, while Aamir has a son, Junaid, and a daughter, Ira, from his first wife Reena. Aamir ended his 15-year-old marriage to Reena in 2002.
During the filming of Ashutosh Gowariker's Lagaan, Aamir met assistant director Kiran, and they fell in love and tied the knot in 2005.
In 2009, Kiran got pregnant, but she had a miscarriage.
Kiran and Aamir said that due to medical complications, "we were advised to have a baby through IVF - surrogacy, and we feel very grateful to the Almighty that all has gone well. We are humbled by the greatness of god, the miracles of science, and the kindness and love of our families and friends in being there for us while respecting our privacy."
labels:amirkhan, child,

Friday 2 December 2011

சில்க் ஸ்மிதா, படம் ரிலீசாகுமா?


இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடிசில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த தர்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் படமாகியுள்ளது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது.
 
சில்க் ஸ்மிதாவின் சினிமா பிரவேசம், காதல், நடிகர்களால் அவர் ஏமாற்றப்பட்டது, காதல் தோல்வி போன்றவை இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய சில்க் ஸ்மிதாவின் சகோதரர் விட்லபர்ல நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்க எங்களிடம் அனுமதி பெறவில்லை. அவர் சாவில் மர்மம் இருக்கிறது. ஆனால் படத்தில் உண்மை சம்பவங்கள் இடம் பெறவில்லை. எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆந்திரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் படம் திட்ட மிட்டபடி இன்று ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி எழுந்தது.

labels:silk, film,  
 

Thursday 1 December 2011

தலையுடன் வந்த கணவர்.


சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (41). இவர் அப்பகுதியில் சீப்பு, கண்ணாடி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜா (38). சரோஜாவிற்கு கள்ளத்தனமான உறவு இருந்து வந்துள்ளது. இதை ராஜா பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பக்கத்திலிருந்த ஆயதத்தால், சரோஜாவின் தலையை ராஜா வெட்டினார். அந்த தலையுடன், ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள எடப்பாடி போலீஸ் ஸ்டேசனிற்கு ராஜா வந்தார். மனைவி தலையுடன் போலீசில் கணவன் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

labels: station, police,

40 weeks of daily meditations...yes. week 1, days 2.

...(A)t some moment i did answer yes to someone-or something-and from that hour i was certain that existence is meaningful......                                            
                                                                                                              -Dag Hammarskjold.

yes! you are pregnant. congratulation and welcome and to the world of motherhood.
   conceiving a child - carrying and loving and breathing life into a brand-new human being-is one of the most powerful acts imaginable.
   Affirm the creative force that has brought you to this moment. affirm your gratitude for the gift of new life.
 affirm your hopes and dreams for the future.affirm the courage and commitment required to take this profound, life-changing step.

   yes! from the depth of your being, say yes ton the adventure that lies ahead.
affirmation: yes, i am ready for pregnancy and parenthood.

labels: pregnant,     

Wednesday 30 November 2011

சோம்பேறித்தனம், நரம்புத் தளர்ச்சி தவிர்க்க வழிகள்!

நின்ற பாத ஆசனம்
வலது காலில் நின்று கொண்டு இடது காலை மடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து ஆசனவாயில் படும்படி நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக் கூடாது.
பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். நின்று கொண்டு காலை பத்மாசனத்திற்குப் போடுவது போன்றும் செய்யலாம். மூச்சு சாதாரணமாக விடலாம். பழங்காலக் கோவில்களில் இதுபோன்ற ஆசன நிலையில் உள்ள சிற்பங்கள் பல காணலாம்.
பலன்கள்....
இவ்வாசனம் பார்வைக்கு மிக இலகுவாகத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம். தியானம், மன ஒருமைப்பாடு, திடசிந்தனை இவைகளுக்கு சிறந்த ஆசனம். வாதம், நரம்புத் தளர்ச்சி, சோம்பேறித்தனம் இவைகள் ஒழியும். மனச் சஞ்சலம் ஒழியும். திடமனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும். மன அமைதி பெறும். சஞ்சலங்கள் ஏற்படாது.

labels:nervess weak,meditation,

தாய்-மகள் கழுத்தை அறுத்து கொலை?


திருமங்கலத்தில் பயங்கரம்: கழுத்தை அறுத்து தாய்-மகள் படுகொலை; வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்
திருமங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது45). இவரது மகள் வாசுதேவி (19). இவருக்கும் திருமணமாகிவிட்டது. 2 பேருமே கணவர்களை விட்டு பிரிந்து ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்தனர். பாண்டியம்மாள் திருமங்கலம் நகரசபையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வாசு தேவியும் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்தார்.
 
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பாண்டியம்மாளின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை தட்டினர். கதவை தட்டியதுமே அது தானாக திறந்து கொண்டது. வீட்டுக்குள் பாண்டியம்மாளும், வாசுதேவியும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
 
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் திருமங்கலம் டவுண் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்தனர். தாய்-மகள் 2 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது தெரியவில்லை.

labels:thirumangalam, police,death.

Tuesday 29 November 2011

பெட்ரோல் விலை குறைப்பு!!


பெட்ரோல் விலையை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு   ஏற்ப எண்ணை   நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணை  விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. எனவே, இங்கு பெட்ரோல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்தன.
 
இம் மாதம்  16-ந்தேதி லிட்டருக்கு ரூ.2.22வரை விலை  குறைக்கப்பட்டது. இந்த விலை  குறைப்புக்கு பிறகு டெல்லியில் ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ.66.42-க்கு விற்கப்படுகிறது.
 
இந்நிலையில், பெட்ரோல் விலை மீண்டும் குறைக்கப்பட உள்ளது. எண்ணை நிறுவன அதிகாரிகள் கடந்த வாரம் கூடி இதுபற்றி   முடிவு  எடுத்தனர். விலை  குறைப்பு முடிவு இன்று நள்ளிரவு   முதல் அமலுக்கு  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை குறையும் என்று கூறப்படுகிறது. அத்துடன்  பெட்ரோல் மீதான வரியும் லிட்டருக்கு ரூ.1.02 குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

labels:petrol,delhi.

பஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.......


51-ல் இருந்து 58 சதவீதமாக பஸ் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அக விலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படியை 51 விழுக்காட்டில் இருந்து 58 விழுக்காடாக 1.7.2011 முதல் உயர்த்தி வழங்கவும், அதற்கான நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கவும் கடந்த அக்டோபர் மாதம் நான் ஆணையிட்டேன்.
 
இதேபோன்று, தமிழ்நாட்டில் இயங்கி வரும் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியையும், 51 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக 1.7.2011 முதல் உயர்த்தி வழங்க நான் தற்போது ஆணையிட்டுள்ளேன்.
 
இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவையின்றி ரொக்கமாக 1.7.2011 முதல் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 9 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவாகும்.
 
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 261 அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் பயன் பெறுவர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பணியாளர்களும், தொழிலாளர்களும் மேன்மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் கடமையாற்ற வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்.
 labels:jeyalalitha,

அம்மா ஓய்வு


முதல்வர் ஜெயலலிதா நாளை, நீலகிரி மாவட்டம் கோடநாடு செல்கிறார். முதல்வர் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி (பொறுப்பு) அம்ரேஷ் பூஜாரி, டிஐஜி ஜெயராமன், நீலகிரி எஸ்பி நிஜாமுதீன், குன்னூர் டிஎஸ்பி மாடசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

 கோத்தகிரி முதல் கோடநாடு வரை சாலையில் எந்தெந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டது. உள்ளூர் போலீசார் மட்டுமில்லாமல், கோவையில் இருந்து அதிவிரைவு படை போலீசாரையும் வரவழைக்க திட்டமிடப்பட்டது. 

வழக்கமாக ஜெயலலிதா கோடநாடு வரும்போது சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்வது வழக்கம். 

ஆனால், நீலகிரியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மேகமூட்டம் நிலவி வருகிறது. நாளையும் இதே போல் மேகமூட்டம் நிலவினால் ஹெலிகாப்டர் தரையிறங் குவதில் சிக்கல் ஏற்படும். 

எனவே, வாகனம் மூலம் தரைமார்க்கமாக முதல்வர் கோடநாடு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் சில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தோழி சசிகலா ஆகியோரும் கோடநாடு செல்கின்றனர். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா சுமார் 3 வார காலம் தங்கி இருப்பார். டிசம்பர் கடைசியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் சென்னை திரும்புவார்

labels:jeyalalitha,mudalvar,ஜெயலலிதா, முதல்வர் 

Monday 28 November 2011

ரஜினி டாடா காட்டிய தீபிகா.....

http://gallery.oneindia.in/celebs/deepika-padukone-11180.htmlரஜினி டாடா காட்டிய தீபிகா.......எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் குறித்து பெரும் குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. முதலில் சுல்தான் தி வாரியர் என்ற படத்தைக் கூறி வந்தனர். பின்னர் ராணா என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான பூஜையும் போடப்பட்டது. தீபிகா படுகோன் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபிகாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, ராணா படப்பிடிப்பு நின்று போனது. அவர் உடல் நலம் குணமடைந்து திரும்பினாலும் கூட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருப்பதால் அவரை ராணா படத்தில் நடிக்க வைப்பது குறித்து குடும்பத்தினரும், படக்குழுவினரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.

இந்த நிலையில்தான் கோச்சடையான் என்ற புதிய பட அறிவிப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தில், எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவை நாடியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மேற்பார்வைப் பணியைக் கவனிக்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதனால் ராணா பட நாயகி தீபிகா கடும் அப்செட்டாகியுள்ளாராம். ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது குறித்து அவரிடம் கருத்து கேட்போரிடம், அதுகுறித்து என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். நான் இப்போது மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ராணா படம் குறித்து எனக்கு ஒரு தகவலும் தெரியாது. எனவே அதுகுறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்.

தீபிகா இப்படி மறைமுகமாக கூறினாலும் கூட இப்படத்தில் நடிக்கும் திட்டத்தை தீபிகா கைவிட்டு விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மாறாக, ராணா படத்துக்காக ஒதுக்கி வைத்திருந்த கால்ஷீட்களை தற்போது புதிய இந்திப் படங்களுக்கு அவர் ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். மீண்டும் ராணா படத் தரப்பில் தன்னை அணுகினாலும் அவர் மறுத்து விடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

labels:deepika, rajmi,kamal,

3 பைகளில் 2 பையை மட்டும் தப்பியது.


கடையின் அலமாரியில் இருந்த தங்க செயின்கள், தங்க மாலைகள் என 500 பவுன் நகைகள் கொள்ளையடிக்ப்பட்டது தெரிய வந்ததது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். கடையின் பூட்டுகள் மாறி உள்ளதால் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.
கடையில் 18 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சின்னக்கடை வீதியில் ஏராளமான நகை கடைகள் உள்ளது. இந்த வீதி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி ஆகும். மேலும் கொள்ளை போன கடையின் அருகே போலீஸ் பூத் உள்ளது. இங்கு சுழலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இங்கு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது மற்ற நகை கடை உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை நடந்த கடை அருகே கோட்டை காவல் நிலையம்
திருச்சியில் கொள்ளை நடந்த அமர் ஜுவல்லர்ஸ் இருக்கும் சின்னக்கடை வீதியில் மேலும் மிகப்பெரிய நகை கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளது. இங்கிருந்து 10 கடைகள் தள்ளிதான் கோட்டை போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் போலீசார் ரோந்து வருவார்கள். இதனையும் மீறி கொள்ளையர்கள் துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பது வியாபாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நகை பையை விட்டு சென்ற கொள்ளையர்
அமர் ஜுவல்லரியில் பல ரேக்குகள் உள்ளது. இந்த ரேக்குகளில் உள்ள நகையை கொள்ளையர்கள் 3 பைகளில் அள்ளி போட்டு உள்ளனர். ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால் 2 பையை மட்டும் எடுத்து கொண்டு தப்பி உள்ளனர். ஒரு பையை விட்டு சென்றதால் அதில் இருந்த 100 பவுன் நகை தப்பி உள்ளது.


labels:நகை,ஜுவல்லரி,போலீசார். 

ஒல்லியாக ஆக வேண்டுமா?

 தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வில் இறங்கினர்.ஆய்வில் 1,068 பேர் கலந்து கொண்டனர். 

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது. அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களைவிட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரிய வந்தது. அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் ஸ்லிம்மாக இருந்தனர். மேலும் வார இறுதியில் 2 பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறாக சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.


labels:slim,

ஸ்ருதி ஹாசன் வெளியே! இலியானா உள்ளே!

Shruti Hassan
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது படத்தில் இல்லையாம். அவருக்குப் பதில் இலியானாவை ஹீரோயினாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.

இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தபாங் ஏற்கனவே தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகியஉள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம்தான் தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் உருமாறி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல இலியானாவைத் தேடிப் போனதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை கவர்ச்சிக்காக இலியானாவைச் சேர்க்க திட்டமிட்டனரா என்பதும் தெரியவில்லை.

ஆனால் ஸ்ருதி ஹாசன் நீக்கத்தால் நடிகை அமலா பால் சந்தோஷமானதாக ஒரு தகவல் கூறுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 3 படத்தில் முதலில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய பட வாய்ப்பு தெலுங்கில் பறிபோன தகவல் அமலா பாலுக்கு ஹேப்பி நியூஸாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


labels:sruthihasan,amala,

Saturday 26 November 2011

உடம்பு ஒல்லியாக ஆகணுமா? இதை படிங்க.

உடம்பு ஒல்லியாக ஆகணுமா? இதை படிங்க. தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வில் இறங்கினர்.ஆய்வில் 1,068 பேர் கலந்து கொண்டனர். 

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது. அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களைவிட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரிய வந்தது. அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் ஸ்லிம்மாக இருந்தனர். மேலும் வார இறுதியில் 2 பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறாக சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.

labels:slim.

இருளர் இன பெண்கள் போலீசார் பாலியல்

: தங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று திருக்கோவிலூர் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, இருளர் இன பெண்கள் 4 பேர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள டி. மண்டபத்தில் வசிக்கும் இருளர் இன பெண்கள் 4 பேர், திருக்கோவிலூர் போலீசார் நேற்றிரவு தங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

labels:police

Tuesday 22 November 2011

பணத்தை வேஸ்ட்டு செய்யும் அரசியல்வாதிகள்

பார்லி‌மென்ட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக ஒரு ‌கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. டிசம்பர் மாதம்21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தின் முதல் நாளான நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் நடத்திய அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்ட் நடப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சமாக 25 லட்சரூபாய்‌ செலவிடப்படுகிறது. இந்நிலையில் எதிர் கட்சிகள் நடத்திய அமளியால் நேற்று மட்டும் நான்கு மணிநேரம் அவை ஒத்திவைக்கப் பட்டது. இதன் காரணமாக ஒரு கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

labels:பார்லிமென்ட் ,சிதம்பரம்,

Monday 21 November 2011

அப்பொல்லோவில் அனுமதி...... கருணாநிதி?


 திமுக தலைவர் கருணாநிதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு சேர்க்கப்பட்டார்.
 சிறுநீர்ப்பாதையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக அவதிப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

LABELS: கருணாநிதி ,

பூஜாகுமார்தான் ஹீரோயின்.... கமல்.



விஸ்வரூபம் படத்தை சொந்தமாகத் தயாரிப்பது, படத்தின் கதை தழுவலா போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஒரு நேரத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே எனது முழுக் கவனமும் இருக்கும். குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமல் என்னுடைய தேதிகள் வீணடிக்கப்பட்டால் அப்படம் என் பொறுப்பில் வந்துவிடும். விஸ்வரூபம் என் கைக்கு வந்த கதை இதுதான்.

என் நேரம் குறைவு என்பது புரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாள் வரும்போதும், எனக்கான நேரம் குறைந்து கொண்டே போவதை உணர்ந்து பதைக்கிறது மனது. அரசுகளை தேர்வு செய்வது போல, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு வந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

விஸ்வரூபம் எனது கதை

ஹான்னிபல் படத்தின் ரீமேக் தான் 'விஸ்வரூபம்' எனது சிலர் எழுதி வருகிறார்கள். அது உண்மையில்லை. 'விஸ்வரூபம்' எனது கதை.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜோர்டன் ஆகிய நாடுகளில் நடைபெறுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. 'ஹே ராம்' படத்தினை அடுத்து 'விஸ்வரூபம்' படத்தினை இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறேன்.

நியூயார்க்கில் வசிக்கும் பூஜாகுமார்தான் ஹீரோயின்," என்று கூறியுள்ளார் கமல்.


LABELS:KAMAL,NEWFLIM,INDIA,AMERICA,ENGLAND,

நாளை விஜயகாந்த் உண்ணாவிரதம் காரணம் இதோ.


பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறகோரி 24-ந் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். 
அண்மையில் தமிழக அரசு பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தியது. அரசு தரப்பில் போக்குவரத்துக் கழகங்களும், ஆவின் பால் நிறுவனமும் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், அவை முடங்கும் நிலையில் உள்ளது என்பதாலும் இந்த கட்டண உயர்வை மேற்கொண்டதாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுகிறார்.
 எந்த அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டங்களை கண்டு அவற்றை சீர்படுத்த வேண்டும் என்று முதல்வர் அக்கறை கொள்ளுகிறாரோ, அதே அளவுக்கு ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை செலவுகளை சரிக்கட்ட முடியாமல் திண்டாடும்  அந்த மக்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
 அரசின் இந்த போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 24.11.2011 வியாழக் கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தே.மு.தி.க. சார்பில் எனது தலைமையில் சென்னையில் கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை நிலையத்திலும்,
 இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

labels:VIJAYAKANTH,MILK,MINISTOR,JEYALALITHA,CHENNAI.

குடிக்ாரர்களுக்கு பூஸ்ட் கொடுத்த அரசு?

 
விலை உயர்ந்த மது வகைகள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகளை விற்க எலைட் பார்கள் என்ற பெயரில் தனி மது விற்பனை நிலையங்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பல்வேறு பகுதிகளில் ஏசி வசதி செய்யப்பட்ட பார்களும் சாதாரண பார்களும் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பார்கள் ஆளும் கட்சியினருக்கு அல்லது அவர்களுக்கு  வேண்டியவர்களுக்கு தரப்பட்டுள்ளன.

தற்போது புதிதாக 600 எலைட் பார்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் முதல் கட்டமாக வரும் டிசம்பர் மாதம் 200 எலைட் பார்கள் தொடங்கப்பட உள்ளன. இவை பெரும் பாலும் பிரமாண்டமான ஷாப்பிங் சென்டர்கள், மால்களில் அமைக்கப்பட உள்ளன. அதிக அளவு இட வசதி, ஏசி வசதி, நவீன அறைகள், நட்சத்திர ஓட்டல் போன்ற பார்கள், உணவகங்கள் இதில் இடம் பெற உள்ளன.

 ஊரக பகுதிகளில் பரந்த நிலப் பரப்பில் எலைட் பார்கள் அமைக்கப்படும். நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.50. நொறுக்கு தீனியும் வழங்கப்படும். சைட் டிஷ் உணவு வகைகளுக்கு செலவு தனி. குவார்ட்டர் ரூ.130க்கு மேற்பட்ட மதுவகைகள் பீர் வகைகள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனைக்கு கிடைக்கும். இதற்கான வரி கூடுதலாக வசூலிக்கப்படும். உணவு வகைகளுக்கு தனி கட்டணம். மது விற்பனை பிரிவு மட்டும் டாஸ்மாக் நிறுவன கட்டுப்பாட்டில் இயங்கும். பார்களை தனியார் நிறுவனங்கள் மூலம்  நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த பெரிய நிறுவனமும். அண்டை மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் பார்களை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. 


labels:bars,elite bar,