HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday 27 July 2012

500 அடி உயரத்திலிருந்து குதித்த "தில்லான நடிகை!



                                            காந்தி மார்க்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், "பொல்லாங்கு! இதில், நிஷாலால்வானி என்ற மும்பை இறக்குமதி, 
                                           நாயகியாக நடித்துள்ளார். ஒரு காட்சியில் இவர், கொடைக்கானல் மலையில், 500 அடி உயரத்திலிருந்து, "சிங்கிள் ரோப் அணிந்து குதித்தபடி நடித்துள்ளார். 






                                        Actress Jumped from a height of 500 feet,




                                          மேலும், ஒரு பாடல் காட்சியில், "மைனஸ் டிகிரி குளிரில், ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து, குளியல் காட்சியில் நடித்துள்ளார். 
                                        சாதாரண காட்சிகளில் நடித்துவிட்டு, ஆபத்தான காட்சிகளுக்கு "டூப் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை என சொல்லும் நிஷாலால் வானி, 
                                           என் சம்பந்தப்பட்ட எந்த மாதிரி காட்சி என்றாலும், நானே "தில்லாக எதிர்கொள்வேன், என்கிறார்.

Tuesday 24 July 2012

வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக


      
                                          

                                              நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார். 
                                            அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். பெற்றோரும் அவருடன் சென்று இருந்தனர். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
                               


                                                        அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா சென்றதும், அங்குள்ள எனது உறவினர்களை சந்தித்ததும் இனிய தருணங்களாக அமைந்தது. என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றேன். 
                             எனது தலை முடியையும் வித்தியாசமாக மாற்றியுள்ளேன், என்று கூறியுள்ளார். 

போக்குவரத்து போலீஸாரிடம் சிக்கிய விஜய்!

                                     




                                                  சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய். 
                                                   அங்கு சாலையில் காத்திருந்த போக்குவரத்து போலீஸார் காரை கையை காட்டி நிறுத்தி, அந்த காஸ்ட்லீகாரின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பலிம்‌ ரோல்களை அகற்றாமைக்காக அபராதம் போட்டுவிட்டனர்.
                                                     நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். 

Thursday 19 July 2012

அமிதாப் உடன் நடிக்க உள்ள குஷ்ப்பு சந்தோசம்..amithap&kushpu



                                 


                                       இந்திப்படமொன்றில் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளார். நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிப்பதற்காக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.

                               இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம். அமிதாப்புடன் நடிக்கப் போவதால் மகிழ்ச்சியில் இருக்கும் குஷ்பு, 

                              இதுபற்றி அளித்துள்ள பேட்டியில், சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.

Wednesday 18 July 2012

சுவாசிகாவின் தலையை சுவற்றில் மோதும் காட்சி 40 முறையா...




                                            ரணம் படத்தில் சுவாசிகா நடித்த காட்சி 40 முறை படமாக்கப்பட்டது. பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் ரணம். 


                               இது பற்றி அவர் கூறியதாவது: வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகி இருக்கும் இதில் புதுமுகம் வீரா ஹீரோ. ஹீரோயின் சுவாசிகா. 


                               முக்கிய வேடத்தில் சரத், கார்த்தி கேயன் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் வில்லன் ராஜேந்திரன், சுவாசிகா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. 


                     


                                         சுவாசிகாவை சுவற்றில் இடித்து மோதும் காட்சி படத்தில் முக்கிய காட்சியாக இடம்பெறுகிறது. இதற்காக சுவாசிகாவின் தலையை சுவற்றில் மோதும் காட்சி 40 முறை வெவ்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டது.


                               இதனால் ஏற்பட்ட வலியை சுவாசிகா தாங்கிக்கொண்டு நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன் மற்றும் மலேசியா நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பாலகிருஷ்ணன். இசை மரியா மனோகர். இவ்வாறு விஜயசேகரன் கூறினார்.

என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். ஆன்ட்ரியா சேர்ந்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news



                                                இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

                                    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துப்பாக்கி படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ள விஜய், இன்னொரு பாடலை பாடியுள்ளாராம். இவருடன் ஆன்ட்ரியா சேர்ந்து பாடியுள்ளாராம். 

                                             மதன் கார்க்கி  வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல், செம ஹிட்டாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்ள்ளது.

14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று,,,,எம்பி, எம்எல்ஏக்கள் ஓட்டு போடுகின்றனர்

                          நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
                     தேர்தலில் வாக்களிக்க எம்.பி., எம்எல்ஏக்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

                ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் 24ம் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 19ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 12ம் தேதி அறிவித்தது. 

              ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ., அதிமுக, பிஜூ ஜனதா தளம், அகாலிதளம் ஆதரவுடன் பி.ஏ.சங்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.  மொத்தம் 42 பேர் மனு தாக்கல் செய்தனர்.
             இதில் பிரணாப், சங்மா மனுக்கள் தவிர மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. நியமன எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது. 

               1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.  இதன்படி, ஒரு தமிழக எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176. நாடு முழுவதும் மொத்தமுள்ள 4,120 எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,474. 
           இதன் அடிப்படையில் எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு எம்.பி.யின் வாக்குமதிப்பு 708. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள எம்.பி.க்கள் 776 பேரின் மொத்த வாக்கு மதிப்பு 5,49,408. 

             ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ள எம்.பி, எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,98,882. இதில் பாதிக்கு மேல் அதாவது, 5,49,442 வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரணாப், 
              சென்னையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். கடந்த 30ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

            பா.ஜ, அதிமுக ஆதரவுடன் போட்டியிடும் சங்மாவும் பல மாநிலங்களுக்கும் சென்று ஆதரவு கோரினார். இடதுசாரி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.பி. மற்றும் தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. 
                 ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று டெல்லியில் மதிய விருந்தளித்தார். இதில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த கே.டி.சிங், சுகேந்து சேகர் ராய் ஆகிய எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். 

          ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குகள் மட்டுமே பிரணாப் வெற்றி பெற போதும் என்றாலும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகிய கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் பிரணாபின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவித்த திரிணாமுல் காங்கிரசால் பிரணாபின் வெற்றி சதவீதம் அதிகரிக்கும். 

            அடையாள அட்டை கட்டாயம்:  எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளனர். இதற்காக, நாடாளுமன்ற 63ம் எண் அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
               வாக்களிக்க வரும் எம்.பி.க்கள் அடையாள அட்டை அல்லது தேர்தல் அதிகாரியின் அனுமதி கடிதத்தை காட்ட வேண்டும் என்று தேர்தல் அதிகாரியும் மாநிலங்களவை செயலாளருமான வி.கே. அக்னிஹோத்ரி தெரிவித்தார்.

22ம் தேதி ரிசல்ட்

* எம்.பி, எம்எல்ஏக்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,98,882. 
* பாதிக்கு மேல் அதாவது, 5,49,442 வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
* பிரணாப்புக்கு 7.5 லட்சம் வாக்குகள் கிடைப்பது உறுதி. அதாவது 4ல் 3பங்கு ஆதரவு இது.
* இன்று பதிவாகும் வாக்குகள் 22ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலை முடிவு அறிவிக்கப்படுகிறது.

முகமூடி/.... படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 20ம் தேதி


   

         இயக்குனர் மிஸ்கின், தான் இயக்கும் படங்களில் இடம் பெறும் குத்துப்பாட்டில் மஞ்சள் 
சேலையில் நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு இடம் பெற்ற சித்திரம் பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...., அஞ்சாதே படத்தில் கத்தால கண்ணால.. போன்ற பாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்த வகையில் அவர் தற்போது இயக்கி வரும் முகமூடி படத்திலும், அதுமாதிரியான பாடல் இடம்பெறுமா? என்ற கேள்விக்கு மிஸ்கின் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ படமாகும். அதில் குத்துப் பாடலில் மஞ்சள் சேலையில் ஆடுவது கதைக்கு பொருந்தாது
. இருந்தாலும் படத்தில் டாஸ்மாக் கடையில் வைத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு பாடலை எடுத்து இருக்கிறோம். இந்த பாடல், என்னுடைய பழைய படங்களில் உள்ள குத்துப் பாடல்கள் இல்லாத ஏக்கத்தை தீர்த்துவிடும், என்றார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ளது.

labels:முகமூடி, மஞ்சள், சேலையில்லா, குத்துப்பாடல், மிஸ்கின், Not, yellow, sarry, dance, Myskin,

Tuesday 17 July 2012

அக்காள், அண்ணி வேடங்களில் ஜோதிர்மயி.....சின்ன திரையில்


        

             கணவரை விவாகரத்து செய்துவிட்ட நடிகை ஜோதிர்மயி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
      தமிழில் தலைநகரம், பெரியார், நான் அவனில்லை என சில படங்களில் நடித்தார் ஜோதிர்மயி. அவர் தலைநகரம் படத்தில் நடிக்கும் முன்பே, 2004-ல் ஹரிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோலிவுட்டில் ஆது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
        ஆனால் படம் வெளியான பிறகு நடந்த பிரஸ்மீட்டில் அவராகவே சொல்லிவிட, அப்போதே அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.
   

               ஹரிகுமார் - ஜோதிர்மயி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்கள்.
     கடந்த வருடம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. விவாரத்துக்குப் பின் சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிர்மயி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
      

            மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். கதை கேட்டு வருகிறார். இதற்கிடையில் மலையாள டி.வி. சேனல் ஒன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.

வீடு விற்க்க நல்ல யோசனை செய்த பெண்....3 பெட்ரூம் கொண்ட....


     Scorned Mom Uses Husband Affair Sell Family Home    

           22 வயதேயான யோகா டீச்சரோடு ஓடிப் போனார் ஒரு கணவர். இதனால் வெகுண்ட மனைவி படு சாதுரியமாக, தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்த வீட்டை விற்க நூதனமான முறையி்ல விளம்பரம் கொடுத்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.
        அமெரிக்காவில்தான் இந்தக் கூத்து. அந்த பெண்ணின் பெயர் எல்லி ஸோபர். 37 வயதாகிறது. இவருடைய கணவருக்கும், 22 வயதான கல்லூரி மாணவி + யோகா டீச்சருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு விட்டது. மேலும், தனது வீட்டுக்கு வராமல் அந்தப் பெண்ணோடு சுற்றிக் கொண்டிருந்தார் ஸோபரின் கணவர். இதனால் வெகுண்ட ஸோபர், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
        இதையடுத்து தற்போது தானும்,தனது கணவரும் சேர்ந்து வசித்த வீட்டை விற்க தீர்மானித்த ஸோபர் அதற்காக ஒரு சூப்பர் ஐடியாவை களம் இறக்கினார். தனது வீட்டுக்கு வெளியே வீடு விற்பனைக்கு என போர்டு வைத்தார்.
அந்தப் போர்டில் இப்படி இருந்தன வாசகங்கள்...
      22 வயதுப் பெண்ணுக்காக எங்களை விட்டு விட்டார் எனது கணவர். இந்த வீடு விற்பனைக்கு உள்ளது. தனியாக நிற்கும், சற்றே மனக் கசப்புடன் இருக்கும், பெண்ணாகிய நான், எனது கணவரின் கள்ளக்காதலால் இந்த வீட்டை விற்கும் நிலைக்கு வந்து விட்டேன். வாங்க விரும்புவோர் அணுகலாம், செக்ஸ் ரீதியான அணுகுமுறைகளைக் கண்டிப்பாக தவிர்க்கவும் என்று போட்டு வைத்துள்ளார் குசும்புக்கார ஸோபர்.
        ஏன் இப்படி ஒரு விளம்பரம் என்று அவரிடம் கேட்டால், இது உண்மையில் எனது தாயாரின் ஐடியாதான். அவர் ஆரம்பத்தில் சொன்ன ஐடியா இதை விட படு மோசமாக இருந்தது. நான்தான் அதை சற்று மாற்றி கொஞ்சம் நாகரீகமாக போட்டு வைத்தேன் என்றார். இவரது இரு மகள்களும் கூட தாயாரின் இந்த போர்டுக்கு சப்போர்ட்டாக இருந்துள்ளனராம்.
        இந்த விளம்பர போர்டைப் பார்த்து விட்டு ஏகப்பட்ட பேர் பதில் அனுப்பியுள்ளனராம். அவர்களில் பலரும் ஸோபரின் கணவரை சரமாரியாக திட்டியுள்ளனர். பேசாமல் அவரைக் கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்திருக்கலாமே ஸோபர் என்றும் ஒரு கமெண்ட் வந்ததாம். அதேசமயம், உங்க வீட்டு அழுக்கையெல்லாம் ஏன் வெளியில் கொண்டு வந்து கொட்டுகிறீர்கள் என்று சிலர் விமர்சிக்கவும் செய்துள்ளனராம்.
      எப்படியோ, 3 பெட்ரூம் கொண்ட இந்த வீட்டுக்கு கண்டிப்பாக நல்ல விலை கிடைக்கும் என்று ஸோபரும் அவரது குடும்பத்தினரும் நம்பிக்கையில் உள்ளனர்.

மேடையில் மேலாடையை கழட்டிய ...... பாப் பாடகி மடோனோ


     Now Madonna Flashes Her Left Breast     

            பிரான்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது பிரபல பாப் பாடகி மடோனா தன் உள்ளாடைகளை விலக்கி, ரசிகர்களை ஏகத்துக்கும் உசுப்பேற்றியது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
           பிரபல பாப் பாடகி மடோனோ தன் மகளுடன் உலக இசைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
        கடந்தமாதம் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் இஸ்தான்புல் நகரில் இசைக்கச்சேரி நடத்தியபோது, மேடையில் மிகக் கவர்ச்சியாக தோன்றினார் (அம்மணிக்கு வயசு 53!). 55000 ரசிகர்கள் முன்னிலையில் அவர் தனது வலப்பக்க பிராவை லேசாக இறக்கி முன்னழகைக் காட்டி அதிர வைத்தார்.
        இது பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் கிளப்பியது.
        இந்த சர்ச்சை ஓயும் முன்பே, மீண்டும் ஒரு படி கீழிறங்கிவிட்டார் மடோனா.
கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு 80000 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
       மேடையில் பேய் வேகத்தில் ஆட்டம் போட்ட மடோனா, ரொம்ப கூலாக தனது இடது பக்க பிராவை விலக்கி முன்னழகை முழுசாகக் காட்ட, ரசிகர்கள் திக்குமுக்காடினர். அடுத்து அவர்களை இன்னும் அதிர வைக்கும் விதத்தில் தனது பேன்டின் பக்கவாட்டு ஜிப்பை சரக்கென்று இழுக்க, அது கீழே இறங்கி அவரது மெல்லிய பேன்டீஸைக் காட்டியது. சில நொடிகள் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தரிசனம் தந்தார்.
   அப்படியே பின்பக்கம் திரும்பி கொஞ்ச நேரம் நின்றார். முதுகில் நோ பியர் என்று வேறு எழுதப்பட்டிருந்தது.
   மடோனா இப்படி நடந்து கொள்வது புதிதல்ல. அவர் ஏற்கெனவே 1995-ல் மேடையில் ஒரு கச்சேரியின்போது சட்டென்று நிர்வாணமாகி அதிர்ச்சி கொடுத்தார்.
     மடோனாவின் இந்த செயலை பத்திரிகை மற்றும் பார்வையாளர்களில் பலர் விமர்சித்துள்ளனர்.

காரில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட மோகன் கைது



                சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லதா. 22 வயதாகும் இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டில் புதிதாக கார் வாங்கினர். அந்தக் காரை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு கிளம்பினார்.
            அடையார், கஸ்தூரிபாய் நகர் வந்த அவர் 3வது கிராஸ் தெருவில் காரை ஓட்டி வந்தபோது திடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதனால் கார் நின்று விட்டது. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அவர் என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தார்.
            அப்போது அங்கு வந்த கால் டாக்சி டிரைவரான 24 வயதான மோகன் என்பவர், உதவி செய்வதாக கூறியுள்ளார்.
            இதை நம்பிய லதா, காரில் பெட்ரோல் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு மோகன், அருகில் இருந்த ஒரு பெட்ரோல் பங்குக்குப் போய் கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். பின்னர் அதை லதாவின் காரில் ஊற்றினார். அதற்கு லதா நன்றி சொன்னார். அப்போது, மோகன், தனது கார் அருகில் நிற்பதாகவும், தன்னை அங்கே இறக்கி விட்டு விட முடியுமா எனறு லதாவிடம் கேட்டார். அதற்கு உடனே சரி என்று கூறினார் லதா.
           பின்னர் லதா காரை கிளப்ப, பின் இருக்கையில் அமர்ந்திருந்த மோகன், லதா எதிர்பாராத நேரத்தில், பின்னாலிருந்து லதாவை கட்டிப்பிடித்தார். பின்னர் அவரது முகத்தில் முத்தமிடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த லதா உடனே காரை நிறுத்தி விட்டு உதவி கோரி கத்தினார்.
          அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தோர் ஓடி வந்தனர். காருக்குள் இருந்த மோகனை வெளியே இழுத்து சரமாரியாக அடித்தனர். அவரை விசாரித்தபோது திருவாரூரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. பின்னர் அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
          லதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் மோகனைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Monday 16 July 2012

7 வயது குழந்தையுடன் இணைந்து நடிப்பது......ரொம்பவே ஆர்வமுடன்... கமல்



                                            நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக ஹாலிவுட்டில் இயக்கி-நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிப்புத் திறமையுடன் கூடிய 7 வயது சிறுமியை தேடி வருகிறார். 
                                     ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு, அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார். 
                                     இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். 
                                  கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் கேரக்டரும். எனவே படம் முழுக்க கமல்ஹாசனுடன் இந்தக் குழந்தை கேரக்டரும் கூடவே வருமாம்.

                            


                                        இதுகுறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், பார்க்க அழகாக இருந்தால் மட்டும் பத்தாது, நன்கு நடிக்கவும் தெரிய வேண்டும். 
                               அப்படிப்பட்ட சிறுமியைத்தான் தேடி வருகிறோம். நான்கூட 7 வயதில்தான் நடிக்க வந்தேன். எனவே அந்த வயதில் ஒரு குழந்தை எப்படி இருக்கும், 
                           எப்படி உணரும் என்பது எனக்குத் தெரியும். எனவே 7 வயது குழந்தையுடன் இணைந்து நடிப்பது என்பதை ரொம்பவே ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன், என்று கூறியுள்ளார்.

பிரபுதேவா படத்தில் விராட் கோலி... முதல் அனுபவம்...


                                                  டான்சர், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கும் பிரபுதேவா, விளம்பர படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
                                                     இந்த விளம்பர படத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி நடிக்கிறார். ஆண்களுக்கான புதிய காலணி விளம்பரம்தான் அந்த விளம்பரம். 
                                          முதன்முதலாக விளம்பர படம் இயக்குவது குறித்து பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், இது என்னுடைய முதல் விளம்பர படம். ஒரு நிமிடத்திற்குள் ஒரு கதையை சொல்லிவிட வேண்டும் என்பது ஒரு புது அனுபவமாக இருந்தது.
                                           விராட் கோலியுடன் பணிபுரிந்தது ஜாலியாக இருந்தது. அவர் ஒரு இனிமையான மனிதர், என்று கூறியுள்ளார். 

                                பிரபுதேவா தற்போது இந்தியில் இன்னும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இப்படத்தில் நடிக்க பாலிவுட்டின் கிரிஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Saturday 14 July 2012

விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்ற...ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல்

                  

                     காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். 

              திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். 

     இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...?

                 தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு.

                

                       இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். 

           அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.  

              


                     குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு. 
அவளது குழந்தைத் தனங்களையும், 

            தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.

           


                  குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், 

         அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள். 

               உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம். 
 
           விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.

          

             வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன்  மனைவி யைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், 
           விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.

தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கிய... நமீதா,

                                  தமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்க வைத்திருக்கும் நடிகை நமீதா, 



                              கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

                                 இந்நிலையில் மானாட மயிலாட அனுபவம் குறித்து நமீதா அளித்துள்ள பேட்டியில், மானாட மயி​லாட நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன். 



                       இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, 


           


                          போட்டியாளர்களுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது. தென்​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக மானாட மயி​லாட மூலம் கிடைக்கிறது. 


                    




                     சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைகளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன். மானாட மயிலாட நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது, என்று கூறியுள்ளார்.

ஆடும் அலை மேலே ஓடும் கப்பல் போலே.....புயல் ஆஷா கோத்தாரி.




                                             நாட்டின் பொருளாதாரம், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயலும் தீவிரவாத கும்பலை அழித்து, நாட்டை பாதுகாக்கும் கதையில் உருவாகியுள்ள படம், 


                               

                                   "சுழல்! இந்த படத்தில், "ஆடும் அலை மேலே ஓடும் கப்பல் போலே, இது வாழ்க்கை பயணம் தானே... என்றொரு பாடல் உள்ளது. 


                                      இந்த கருத்தான பாடலில், கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார், மும்பையின் கவர்ச்சி புயல் ஆஷா கோத்தாரி. இந்த பாடல் "க்ளிக் ஆகிவிட்டால், அடுத்து,


                            கோலிவுட் சினிமாவில் மையம் கொள்ளும் முடிவிலும் இருக்கிறார் ஆஷா. இவரது இந்த அதிரடி முடிவு, கோடம்பாக்கத்தின் கவர்ச்சி நடிகைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பிரபுதேவா வழியில் இயக்குநராகிறார்....மாஜி காதலி.. நயன்தாரா.





                              சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகி இப்போது இயக்குநராக மாறியிருக்கும் பிரபுதேவாவை போன்று அவரது மாஜி காதலி நயன்தாராவும் நடிகையை தொடர்ந்து இயக்குநராகும் ஆசையில் இருக்கிறார். 


                       அதற்கான வேலையை இப்போதே தொடங்கிவிட்டார் நயன்தாரா. ஆம்! விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித், ஆர்யா, டாப்ஸி, ஆகியோருடன் நயன்தாராவும் நடித்து வருகிறார்.


                    


                    இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதுடன், உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறாராம் நயன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக வருவது, 


                      படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது, க்ளாப் அடித்து ஷாட் துவக்கி வைப்பது என்று உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் நயன்தாரா செய்து வருகிறாராம். 


                 படம் இயக்குவதை உதவியாளராக இருந்து கற்றுக்கொண்டு பிறகு டைரக்டராக எண்ணியுள்ளார். விரைவில் புதுப்படம் ஒன்றையும் நயன்தாரா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சபரிமலையில் ஆடி மாத பூஜை...சபரிமலை நடை இன்று திறப்பு


                          சபரிமலையில் ஆடி மாத பூஜைகளுக்காக, கோவில் நடையை இன்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி திறக்கிறார். 

                           தொடர்ந்து, மேல்சாந்தி பதினெட்டாம்படி வழியாக கீழே இறங்கி, பக்தர்கள் கொண்டு வரும் நெய் தேங்காய்களை கொட்டி எரிக்கும் பகுதியில் தீ மூட்டுவார்.

                          இன்று கோவில் நடை திறந்த பிறகு, பூஜைகள் ஏதுமிருக்காது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடத்தப்படும்.இதனை தொடர்ந்து,

                               வழக்கமான பூஜைகள் துவங்கி நடைபெறும். ஐந்து நாட்கள் திறந்திருக்கும் கோவில் நடை வரும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி அடைக்கப்படும்.

வீட்டை இடிக்காமல் உயர்த்தலாம்... 300 ஜாக்கி... 3 அடிக்கு உயர்த்தி

                        கோவை  சாயிபாபாகாலனி ராமலிங்க காலனியை சேர்ந்தவர் டாக்டர் ஆறுமுகம். தரைதளம் மற்றும் இரு மேல் தளங்களுடன் 3500 சதுர அடி கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். 


                சமீபத்தில் இவரது வீட்டுக்கு அருகில் உள்ள ரோடு விரிவாக்கம் செய்து தார் போடப்பட்டது. ரோடு இரண்டடி உயர்ந்ததால் வீடு பள்ளத்தில் இருந்தது. வீடு பள்ளத்தில் இருப்பது வாஸ்துப்படி சரியில்லை என டாக்டர் நினைத்தார்.


              தந்தை கட்டிக்கொடுத்த வீட்டை இடிக்கவும் அவருக்கு மனமில்லை. புதுவையை சேர்ந்த ஆறுமுகத்தின் நண்பர் ஒருவர் வீட்டை புதிய தொழில்நுட்பம் மூலம் உயர்த்தியிருப்பது தெரியவந்தது. 

              இதை பார்த்த ஆறுமுகம், தனது வீட்டையும் அதேபோல் உயர்த்துவதற்கு திட்டமிட்டார். இதில் ஹரியானாவை சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் நிறுவனம், வீட்டை இடிக்காமல் உயர்த்தி தருவதற்கு ஒப்பு கொண்டது. 


           45 நாட்களில் இப்பணிகளை முடிக்க மொத்தம் ரூ.10 லட்சம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. வட மாநிலங்களில் இருந்து கை தேர்ந்த 25 கட்டுமான ஊழியர்களை இதற்காக அந்நிறுவனம் அழைத்து வந்தது. வீட்டை சுற்றிலும் 300 ஜாக்கி வைத்து ஒரே நேரத்தில் வீட்டை 3 அடிக்கு உயர்த்தியுள்ளனர். தற்போது 50 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. 

       மீதி பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர். எப்படி சாத்தியமாகிறது?: கட்டிடத்தை உயர்த்தும் பணி மேற்கொள்வதற்கு முன் தொழில்நுட்ப குழுவினர் முதலில் இடத்தை பார்வையிடுகின்றனர். 


     கட்டிடத்தின் உறுதித்தன்மை, அருகில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்கின்றனர். பின்னர் கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் 3 அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் ஜாக்கிகளை பொருத்துகின்றனர். 


      பழைய அஸ்திவாரத்தை படிப்படியாக அகற்றி ஒரே நேரத்தில் வீட்டை சுற்றிலும் உள்ள ஜாக்கிகளை இயக்குகின்றனர். இதில் நாள் முழுவதும் ஜாக்கி இயங்கினாலும் சென்டி மீட்டர் அளவுக்கு தான் வீடு நகரும். 

            உயர்த்தவேண்டிய அளவுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 30 நாட்களில் இருந்து 45 நாட்களாகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.250 முதல் ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கட்டிடம் இடிந்தால் அதற்கான முழு செலவையும் அந்நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. 


            வீட்டுக்கான மின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்படுகிறது. மற்ற பொருட்களும் அகற்றப்படுகின்றன. கதவு, ஜன்னல்கள் அகற்றுவதில்லை. குறிப்பிட்ட உயரத் துக்கு வீட்டை தூக்கியவுடன், அஸ்திவாரத்தில் கான்கிரீட் வைத்து மூடப்படும். ஜாக்கிகள் வெளியில் எடுக்கப்படும்.

கள்ளகாதலர்கள் உஷார் பீச்சில்....... தவறு செய்தால் உடனே கைது


             

             கடற்கரைக்கு காற்று வாங்கலாம் என்று போனால் கண்டதையும் பார்க்க நேரிடுகிறது. இதனால் மக்கள் குறிப்பாக கணவர், குழந்தைகளுடன் செல்லும் பெண்கள் கடும் முகச் சுளிப்புக்கு ஆளாகிறார்கள். 
           நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, முத்தமிடுவது, கைகளைப் பிணைந்து பிசைந்து விளையாடுவது, சில்மிஷங்கள் செய்வது என களேபரப்படுத்துகின்றனர் காதல் ஜோடிகள்.
           படகு இடுக்குகளில் போய் உட்கார்ந்து கொண்டு பேசுவது, முத்தமிடுவது என்று பயமுறுத்துகின்றனர். 'அதைத்' தவிர மற்ற எல்லாவற்றையும் பீச்சிலேயே முடித்து விடுகிறார்கள் இவர்கள்.
            இளம்காதல் ஜோடிகளை விட இந்தக் கள்ளக்காதல் ஜோடிகளின் தொல்லைதான் ஏகமாக உள்ளது. மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாமல் வந்த வேலையிலேயே மும்முரமாக இருக்கும் இவர்களால் மற்றவர்களுக்குத்தான் ரொம்ப 'சங்கட்டமாக' இருக்கிறது.
        பார்க், பீச் என்றில்லை, ரயில்கள், ரயில் நிலையங்கள், தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகள் கூட்டம்தான்.
         சென்னை ரயில் நிலையங்கள் அனைத்திலும் இந்த காதல் ஜோடிகளை தவறாமல் பார்க்கலாம். உட்கார்ந்திருக்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர் காதல் ஜோடிகளாகத்தான் தென்படுகின்றனர்.
        இந்த நிலையில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளைப் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக 6 அதிகாரிகளை கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
        சமீபத்தில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்ட 500 ஜோடிகளைப் பிடித்த இவர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பினர். சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வகுப்பறையில் மாணவியின் ஆடையை அவிழ்த்து சோதனையிட்ட ஆசிரியை....


            மேற்கு வங்கத்தில் பணம் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட மாணவியை வகுப்பறையில் சக மாணவிகள் முன்பு ஆடையை அவிழ்த்து ஆசிரியை சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
            மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பதா பவன் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவி படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது சிறுநீரை அவரையே குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
           மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டம், கோபால்நகரில் உள்ளது கிரிபாலா பாலிகா வித்யாலயா மகளிர் பள்ளி. அங்கு 8ம் வகுப்பு படிக்கும் மாணவி பாயல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
          கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்ற பாயல் சக மாணவியின் பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து ஆசிரியை ரூபாலி சக மாணவிகள் முன்பு வகுப்பறையில் வைத்து பாயலின் ஆடையை அவிழ்த்து சோதனையிட்டார்.
      இதனால் மனமுடைந்த பாயல் வீட்டுக்கு சென்றதும் வகுப்பறையில் நடந்தவற்றைத் தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து அவரது தந்தை பபித்ரா மோண்டல் ஆசிரியை ரூபாலி மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழ்ககுப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
        பணம் கிடைத்ததா என்று கேட்டதற்கு விசாரணை நடந்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கல்லூரி மாணவியை கற்பழி்த்து அதை வீடியோ...இணையதளத்தில் வெளியிட்ட


         குஜராத்தில் வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியை கற்பழி்த்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
           குஜராத் மாநிலம் தகோத் பகுதியைச் சேர்ந்தவர் லதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரி மாணவி. அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் இளைஞர் ஒருவர் லதாவை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்து வந்துள்ளார். 
           அவரது காதலை லதா ஏற்கவில்லை. இந்நிலையில் லதா வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த அந்த வாலிபர் அவருக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துள்ளார்.
       அதை குடித்த லதா மயங்கினார். இதையடுத்து அந்த வாலிபர் லதாவை கற்பழித்து அதை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதோடு சி.டி.க்கள் போட்டு பலருக்கும் கொடுத்துள்ளார்.
         இது குறித்து அறிய வந்த லதா பேரதிர்ச்சி அடைந்தார். அவரது பெற்றோர் இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
      பெண்களுக்கு வீட்டிலும், ரோட்டிலும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Friday 13 July 2012

ஹைஹீல்ஸ்க்கு செக்ஸ் உணர்வை தூண்டும் சக்தி இருக்கிறதாம்....

5 Innocent Items That Will Spice Up       




              தம்பதியர்களின் தாம்பத்ய உறவுக்கு உற்சாகம் அளிக்கும் சில விசயங்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். மீன் உணவு, டார்க் சாக்லேட் ஏன் ஹைஹீல்ஸ் கூட தம்பதியர்களின் செக்ஸ் உணர்வை அதிகரிக்குமாம் நிபுணர்களின் ஆலோசனையை படியுங்களேன்.
டென்ட் போடுங்களேன்
          வீட்டில் அதே அறையில் என்றால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்யும். எனவே வார விடுமுறையில் தம்பதி சமேதராக புதிதாக எங்காவது டூர் போங்களேன். வனப்பகுதி என்றால் கூடுதல் சவுகரியமாம். 
        அங்கே டென்ட் போட்டு புதிதாய் தொடங்குங்களேன். இருவருக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும். வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருந்து விடலாமா என்று எண்ணத்தோன்றும்.
மீன், டார்க் சாக்லெட்
                உடலின் உற்சாகத்தை, லிபிடோ சக்தியை அதிகரிப்பதில் சல்மான் மீன், டார்க் சாக்லெட்டிற்கு கூடுதல் சக்தி உண்டாம். சல்மான் வகை மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் கிளர்ச்சியை தூண்டி விடுகிறதாம். 
                  அதேபோல் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் டார்க் சாக்லேட் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அடுத்தமுறை இனி அலுவலகத்தில் இருந்து போகும் போது அல்வாவிற்கு பதிலாக டார்க் சாக்லேட் வாங்கிப் போகலாம்.
ஹைஹீல்ஸ் போடுங்களேன்
                   செக்ஸியான உடைகள் அணிவது கிளர்ச்சியை அதிகரிக்கும் என்பார்கள். ஆனால் ஹைஹீல்ஸ்க்கு செக்ஸ் உணர்வை தூண்டும் சக்தி இருக்கிறதாம். படுக்கை அறைக்கு செல்லும் போது ரெட் கலரில் மினி ஸ்கட் ஹைஹீல்ஸ் என அணிந்து செல்லுங்களேன் உங்கள் துணைவரின் உற்சாகம் ஊற்றெடுக்கும். 
                    உங்களின் கால் அழகும், தன்னம்பிக்கையும்தான் அதற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.