HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday 6 January 2012

35 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.... தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் பங்கேற்பு...


புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 
1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள் பங்கேற்பு
              தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரித்து அருகில் உள்ள புதுவை, கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். உணவு பொருட்களை சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. சமையல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் முடி உணவில் விழுந்து விடாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்துள்ளனர். கையுறையும் அணிந்திருக்கிறார்கள்.
 
              தரமான பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பல ஆயிரம் கிலோ காய்கறிகள், அரிசி மூட்டைகள், ரவை போன்றவை குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து 24 மணி நேரமும் சமையல் நடந்து வருகிறது. அவற்றை நித்யானந்தரே நேரடியாக கண்காணிக்கிறார்.அவரே சமையல் பணிகளிலும் ஈடுபடுகிறார்.
 
              தயாரிக்கப்பட்ட உணவுகளை 15 வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று கிராமங்களில் வழங்கி வருகிறார்கள். புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் நித்தியானந்தா ஆசிரமம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
 
               4 ஜே.சி.பி. எந்திரங்களை வரவழைத்து கிராமங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். மின் இணைப்பு இல்லாத ஊர்களில் ஜெனரேட்டர்களை கொண்டு வந்து குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு சப்ளை செய்கின்றனர்.

labels: nithyanantha.cuddalore. pondy.

Monday 2 January 2012

திருமணமான 15வயது சிறுமியை.... துன்புறுத்தல்.

   
 ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் திருமணமான 15வயது சிறுமியை, கடந்த ஆறு மாதமாக அவளது கணவன், அவனது தாயார், சகோதரி துன்புறுத்தினர்.
       சிறிமியின் தலைமுடி வெட்டியுள்ளனர். கை விரல்களில் உள்ள நகத்தை பிடுங்கியுள்ளனர். நன்கு காய்ச்சிய கம்பியால் வைத்து சூடும் வைத்தும் துன்புறுத்தினர். போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
      இந்த தகவல் வெளியானதும் ஆப்கான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியை துன்புறுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குற்றவாளிகளை போலீசார் கைது செய்வார் என்றும் கூறினார்.
      இந்நிலையில் ஆப்கன் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சிறுமியை துன்புறுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கணவனை தேடி வருவதாகவும் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை மேல்சிகிச்சைக்காக இந்தியா அனுப்ப அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


tag: hospital, murder,

பெண் டாக்டர்..... மர்மநபர்களால் வெட்டிப்படுகொலை


     * தூத்துக்குடியில் இரவு "கிளினிக்'கில் இருந்த பெண் டாக்டர், மர்மநபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த திருஞானசம்மந்தம் மனைவி சேதுராமலட்சுமி, 50. டாக்டரான இவர்,     

 பாளையங்கோட்டை ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் பகுதி காமராஜ்நகரில்"கிளினிக்' வைத்துள்ளார். இரவு 10.25 மணியளவில் சேதுராமலட்சுமி, அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தபோது, "கிளினிக்'கிற்குள் புகுந்த மர்மநபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், *
  பலத்தகாயமடைந்த சேதுராமலட்சுமி, அங்கேயே பலியானார். கொலையாளிகள் யார்? "கிளினிக்'கில் நடந்த பிரச்னையால் கொலை நடந்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என, தென்பாகம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சேதுராமலட்சுமி, இ.எஸ்.ஐ., டாக்டராக இருந்தார்...


tag:doctor,clinic.