HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Sunday 18 December 2011

செல்போனில் ஆபாசமாக பேசி.....

கோவை அருகேயுள்ள ஆனைகட்டியை சேர்ந்தவர்  மோகனா (56).  கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். தாராபுரம் அமராவதி சிலை அருகே வாடகை வீட்டில் மோகனா குடியிருந்தார். 
 பொள்ளாச்சி சாலையிலுள்ள ஆர்.கே.ஆர் நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி சாலை அருகே உடலில் வெட்டுக் காயங்களுடன் மோகனா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் மோகனா வீட்டருகே வசிக்கும் ராஜாராம் என்பவர்  தாராபுரம் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
பியூட்டி பார்லர் அருகே வசித்துவந்த ராஜாராமுக் கும் (29), மோகனாவுக்கும் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜாராம் திருமணமானவர். மோகனாவுடன் அவ்வப்போது செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதை மோகனா தனது செல்போனில் பதிவு செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம்  கடந்த 12ம் தேதி பணம் தருவதாக மோகனா அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


tags:kovai, பியூட்டி பார்லர்,

No comments:

Post a Comment