HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 2 January 2012

திருமணமான 15வயது சிறுமியை.... துன்புறுத்தல்.

   
 ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் திருமணமான 15வயது சிறுமியை, கடந்த ஆறு மாதமாக அவளது கணவன், அவனது தாயார், சகோதரி துன்புறுத்தினர்.
       சிறிமியின் தலைமுடி வெட்டியுள்ளனர். கை விரல்களில் உள்ள நகத்தை பிடுங்கியுள்ளனர். நன்கு காய்ச்சிய கம்பியால் வைத்து சூடும் வைத்தும் துன்புறுத்தினர். போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
      இந்த தகவல் வெளியானதும் ஆப்கான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியை துன்புறுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குற்றவாளிகளை போலீசார் கைது செய்வார் என்றும் கூறினார்.
      இந்நிலையில் ஆப்கன் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், சிறுமியை துன்புறுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கணவனை தேடி வருவதாகவும் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை மேல்சிகிச்சைக்காக இந்தியா அனுப்ப அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


tag: hospital, murder,

No comments:

Post a Comment