HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 30 November 2011

தாய்-மகள் கழுத்தை அறுத்து கொலை?


திருமங்கலத்தில் பயங்கரம்: கழுத்தை அறுத்து தாய்-மகள் படுகொலை; வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்
திருமங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது45). இவரது மகள் வாசுதேவி (19). இவருக்கும் திருமணமாகிவிட்டது. 2 பேருமே கணவர்களை விட்டு பிரிந்து ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்தனர். பாண்டியம்மாள் திருமங்கலம் நகரசபையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வாசு தேவியும் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்தார்.
 
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பாண்டியம்மாளின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை தட்டினர். கதவை தட்டியதுமே அது தானாக திறந்து கொண்டது. வீட்டுக்குள் பாண்டியம்மாளும், வாசுதேவியும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
 
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் திருமங்கலம் டவுண் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்தனர். தாய்-மகள் 2 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது தெரியவில்லை.

labels:thirumangalam, police,death.

No comments:

Post a Comment