HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday 8 June 2012

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா.... கனிமொழியுடன்...


                    ஜுன் 8 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலை ஆகியிருக்கும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை, மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினர். 

                     2 ஜி. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. 

             இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராசா தவிர கனிமொழி உட்பட அனைவரும் ஜாமீனில் விடுதலை ஆகிவிட்ட நிலையில் கடைசியாக ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது.

             இதையடுத்து டெல்லியிலேயே தங்கியிருக்கும் ஆ.ராசாவை, மு.க. ஸ்டாலின் டெல்லியில் சந்தித்து பேசினார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், கனிமொழி, டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் ஆகியோரும் இருந்தனர். 
               முன்னதாக டெல்லி வந்த ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராசா ஜாமீனில் விடுதலை ஆனபோது நான் லண்டனில் இருந்தேன். அதனால் அவரை சந்திக்க முடியவில்லை. எனவேதான் தற்போது வந்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment