HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 12 June 2012

ஆண் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்ட......போலிஸ் சிறையில்......

                   ஆண் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டான் அவனை போலிஸ் சிறையில் அடைத்தார்கள் என்ற செய்தியை நீங்கள் அடிக்கடி செய்தித்தாளில் பார்த்திருப்பீர்கள். 


                  ஆனால் பெண் ஒரு ஆணை காதலித்து ஏமாற்றினாள் என்ற செய்தியை எப்போதாவது செய்தித்தாளில் பார்திருப்பீர்களா? அப்படியென்றால் காதலிக்கும் ஆணை எந்தப் பெண்ணும் ஏமாற்றுவதே கிடையாதா??

                 நீங்கள் தவறு செய்தாலும் சரி, தவறு செய்யாவிட்டாலும் சரி இந்தியாவில் ஒரு பெண் உங்கள் மீது புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள்.


                ஆனால் நீங்கள் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால் நீங்கள் எந்த வழக்கும் அந்தப் பெண்மீது தொடுக்க முடியாது. ஏனென்றால் தவறு செய்யும் பெண்ணை தண்டிக்க இந்தியாவில் சட்டங்களே இல்லை.
                அப்படி இருக்கும் ஒன்றிரண்டு சட்டங்களையும் காவல்துறையும் நீதித்துறையும் மதிப்பதில்லை. ஒட்டு மொத்த சமுதயாமும் ஆணைத் தண்டிக்க மட்டுமே தயாராக இருக்கிறது. 


                 அவன் தவறு செய்யவில்லை என்றாலும் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அதுபோல ஒரு ஆணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றியும் யாரும் கவலைப்படமாட்டார்கள்.


labels: போலிஸ், 

No comments:

Post a Comment