HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 21 May 2012

தனுஷ்க்கும் எனக்கும் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருக்கிறது.



                                               மீண்டும் தன்னையும், தனுஷையும் தொடர்புபடுத்தி பேசுவது சரியில்லை என்றும், எங்களுக்குள் சினிமா ரீதியான நட்பு மட்டுமே இருப்பதாகவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்து இருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் மகளும், தனுஷூம் 3 படத்தில் இணைந்து நடித்தனர்.


                                                            இப்படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கினார். படத்தில் தனுஷூம், ஸ்ருதியும் ரொம்பவே நெருக்கமாக நடித்து இருந்தனர். மேலும் இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் சில பல மாதங்களுக்கு முன்னர் கிசுகிசு எழுந்தது. 


                                                      இதனால்  தனுஷூக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே சிறு உரசல் கூட ஏற்பட்டதாகவும், ஐஸ்வர்யா தனுஷை பிரிந்து அவரது அப்பா வீட்டில் வசித்து வருவதாகவும் கூட பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் கிடையாது என்று தனுஷ், ஐஸ்வர்யா, ஸ்ருதி ஆகிய மூவரும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் மீண்டும் தனுஷூடன், ஸ்ருதிஹாசனை இணைத்து கிசுகிசுக்கள் வலம் வர தொடங்கி இருக்கிறது. 

                                                  மீண்டும் தனுஷ் உடன் என்னை இணைத்து பேசுவது சரியல்ல. இது முட்டாள்தனமான செயல். தனுஷ்க்கும் எனக்கும் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருக்கிறது. இப்போதைக்கு என்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது. எனக்கு எல்லாமே சினிமா தான். 

                                                   அதுதான் எனக்கு அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. மேலும் இப்போது தெலுங்கில் நான் நடித்த கபார் சிங் படம் வெற்றி பெற்று உள்ளது. அடுத்தபடியாக ஒரு ஆல்பம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.


labels:தனுஷ்,கபார் சிங், ஸ்ருதிஹாசன், 

No comments:

Post a Comment