HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 3 May 2012

நித்யானந்தா மடியில் நான் இல்லை.......


நித்யானந்தா பிடியில் நான் இல்லை.....

கருத்துகள்

                          * நித்யானந்தா உள்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்ட விரோத காவலிலும் நான் இல்லை என்று மதுரை ஆதீனம் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.தர்மபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதீன மடத்தின் 292வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293வது ஆதீனமாக அறிவிக்க செய்துள்ளார் நித்யானந்தா. 


             மதுரை ஆதீனம் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

            இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹரி பரந்தாமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் சார்பில் வக்கீல் வீர.கதிரவன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 


            “நான் நித்யானந்தா உள்பட யாருடைய கட்டுப்பாட்டி லும், சட்டவிரோத காவலிலும் இல்லை. என் தொடர்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அதிகாரம் இல்லை. விளம்பரம் பெறும் உள்நோக்கத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 


             நான் தினமும் ஆதீன மடத்தில் பக்தர்களுடன் கலந்துரையாடி வருகிறேன். நேற்று பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்துப் பேசினேன். ஆனால், மனுதாரர் நான் எங்கிருக்கிறேன் என தெரியவில்லை என்று கூறியிருப்பதில் இருந்து அவரது உள்நோக்கம் தெரிகிறது. 

            எனக்கு அடுத்த ஆதீனத்தை அறிவிக்க முழு அதிகாரம், தகுதி உண்டு. ஆதீனம் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல மனுதாரருக்கு அதிகாரம் இல்லை. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. 


           என்னை வெளிநாடு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறுவது பொய். எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் 4ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment