HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 24 May 2012

டி.வி. நடிகைகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக


       சென்னையில் விபசாரம்:
டி.வி. துணை டைரக்டர்- 2 புரோக்கர்கள் கைது- 4 அழகிகள் மீட்பு  

                  சினிமா மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளின் ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கும் இளம்பெண்களை வைத்து சிலர் விபசாரம் செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் குமார்சிங் ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டனர். 

        துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் அறிவுரைப்படி விபச்சார தடுப்புப்பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாண்டி யாகோ மற்றும் போலீசார் விபசார கும்பலை கூண்டோடு பிடிக்க கண்காணித்து வந்தனர். 

             டி.வி. நடிகைகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்படி வாடிக்கையாளர் போல் போலீசார் செல்போனில் பேசினர். எதிர்முனையில் பேசிய நபர் தன்னிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். வடபழனியில் குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் வந்தால் பெண்களை அழைத்து செல்லலாம் என்றார். 

           இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ மற்றும் போலீசார் மாறுவேடத்தில் அங்கு சென்று விபசாரத்தில் ஈடுபட்ட வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவர் போரூரை சேர்ந்த அன்பு என்பதும், டி.வி.யில் 2 சீரியல்களுக்கு துணை டைரக்டராகவும், மேடை கச்சேரியில் நடன இயக்குனராகவும் இருந்தது தெரிந்தது. விபசாரத்தில் ஈடுபட வைத்திருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டனர். 

        இதேபோல் பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவில் வீட்டில் வைத்து விபசாரம் செய்த மணலியை சேர்ந்த லோகநாதனை கைது செய்தனர். 2 இளம்பெண்களையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட லோகநாதன் வட சென்னையில் பிரபல விபசார புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். 

           c திருச்சியைச் சேர்ந்த அருணை போலீசார் பிடித்தனர். டெல்லியை சேர்ந்த அழகியை மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 4 அழகிகளும் மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

labels: வேளச்சேரி,போலீசார்,

No comments:

Post a Comment