HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 24 May 2012

டீசல், கேஸ் விலையும் உயர்த்தப்படும்? நாளை அறிவிப்பு......

                                     


                                      பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து டீசல், கேஸ் விலையும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக முடிவெடுக்க அமைச்சர்கள் குழு நாளை கூடவிருக்கிறது.



                                பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 7.50 என திடீரென நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது. 

                                           இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத மக்களுக்கு டீசல், கேஸ் விலையையும் உயர்த்தி அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்க மத்திய முடிவுசெய்துள்ளது.


                                           டீசல் விலையை ரூ 5 வரை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனவே டீசல் மற்றும் கேஸ் விலையையும் மத்திய அரசு உயர்த்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


                                          பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து தில்லியில் லிட்டர் பெட்ரோல் ரூ 73.14-க்கும் ஹைதராபாதில் லிட்டர் ரூ 81.44-க்கும் விற்கப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment