HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 14 May 2012

நான் டான்ஸ் மாஸ்டராக இருக்க விரும்பவில்லை!!!! வேண்டுமானாலும் காதலில் விழலாம் ...


                                      
                                       நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனது இந்தி பட வேலையால் மும்பையே கதி என்று கிடக்கும் பிரபுதேவா, தற்போது ரவுடி ரத்தோர் படத்திற்கான ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். 
                                           
                                     இதற்கு அடுத்து சல்மான் மற்றும் அக்ஷ்ய்குமார் படங்களை இயக்க திட்டமிட்டு வருகிறார். இந்தியில் தொடர் படங்கள் இருப்பதால் அங்கேயே வீடு பார்த்து தங்க, அதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். 

                                       தொடர்ந்து நடிப்பு மற்றும் டைரக்ஷ்னில் நடிக்க ஆசை தான். ஆனால் என்னுடைய படத்திற்கே நான் டான்ஸ் மாஸ்டராக இருக்க விரும்பவில்லை. அதற்கு என்று தனியாக நடன அமைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒரு டைரக்டராக நான் அவர்களது நடன விஷயத்திலும் தலையிடமாட்டேன். 


                                           ஆனால் அதேசமயம் ஒரு நடன அமைப்பாளராக சில ஆலோசனைகளை கூறுவேன் என்று கூறியுள்ளார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் இப்போது யாரையும் காதலிக்கவில்லை என்றும், இப்போதைக்கு சினிமாவை மட்டும் காதலிப்பதாகவும்,


                                           மேலும் வாழ்க்கையில் இதுதான் நடக்கும் என்று முன்கூட்டியே கூற முடியாது என்றும், காதல் எப்போது வேண்டுமானாலும் வரலாம், நானும் எப்போது வேண்டுமானாலும் காதலில் விழலாம் என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment