HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Friday 28 October 2011

வாலிபர்களிடம் ரூ. 25 லட்சம் மோசடி....நர்ஸ்...


திருச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு வந்து செல்வேன். அப்போது அதே பகுதியில் உள்ள ரெங்கநாயகி மற்றும் அவரது சகோதரரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் அமெரிக்கா, இங்கிலாந்தில் நர்சு படிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
 
அங்கு சென்று வேலை செய்தால் 3 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதற்கு விசா மற்றும் பயண செலவுகளுக்கு ரூ. 5 1/2 லட்சம் செலவாகும் என்று கூறினார்கள். இதை நம்பி ரூ. 2? லட்சத்தை கொடுத்தேன். என்னைப்போல் கேரளாவை சேர்ந்த ரின்டோ ராஜு, எட்வின், கோபால், ஆஷாபைஜூ உள்பட 9 பேர் ரூ. 24 லட்சத்து 90 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர்.
 
பணத்தை வாங்கிக் கொண்ட ரெங்கநாயகியும், கண்ணனும் எங்களை வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்காமல் ஏமாற்றி விட்டனர். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தோம். அப்போது சப்-இன்ஸ் பெக்டர் ஒருவர் சரியாக விசாரிக்க வில்லை. எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment