HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 31 October 2011

முகத்தில் ஆசிட் ஊற்றி விடுதலை கட்சி செயலாளர் படுகொலை


முகத்தில் ஆசிட் ஊற்றி
விடுதலை சிறுத்தை கட்சி
செயலாளர் படுகொலைஇரவு ஆட்டோ சவாரிக்கு சென்ற மாரியப்பன், பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று பஞ்சப்பூர்   மாநகராட்சி கழிவு நீர் குட்டை அருகே மாரியப்பனின்   ஆட்டோ, அனாதையாக    நின்றது. இதனால்  மாரியப்பன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தினர்.
 
இன்று காலை பஞ்சப்பூர் சாரநாதன்  கல்லூரி  அருகேயுள்ள  ஏரியில்  மாரியப்பன்   பிணமாக    கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றப்பட்டு, சிதைந்த நிலையில் இருந்தது. கையில் வெட்டுக்காயமும் இருந்தது. மர்ம கும்பல், மாரியப்பனை   கொன்று  பிணத்தை  ஏரியில்  வீசி விட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில்  திருச்சி  ஜங்ஷனில் மாரியப்பன் தனது ஆட்டோவில் இந்தி பேசிய 2 வாலிபர்களை  சவாரிக்கு அழைத்து  சென்றுள்ளார். அதன் பின்னர்தான் அவர்  மாயமாகியுள்ளார். எனவே வடமாநில வாலிபர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாரியப்பனுக்கு சுஜாதா, சர்மிளா என்ற 2 மனைவிகளும் 3 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர்.

No comments:

Post a Comment