HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 26 October 2011

2 பெண்களை...கடத்தி?



news
 திருகோணமலை ஹொரவப் பொத்தானை வீதியில் இரண்டு பெண்களை லொறியொன்றில் கடத்திச்செல்ல முற்பட்ட இரண்டு பேரைத் தாம் கைது செய்துள்ளனர் என்று மொறவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இரண்டு பெண்களும் ஹொரவப் பொத்தானை திருகோணமலை வீதியினுடாக கோமரங்கடவல பகுதிக்குச் செல்ல பஸ்ஸூக்காகக் காத்திருந்த வேளையிலேயே இந்தக் கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாகனமின்றித் தவித்ததால் இரண்டு பெண்களும் சுயவிருப்
பத்தின் பேரில் லொறியில் ஏறிச்சென்றுள்ளனர். திரியாய் சந்தியில் இறங்குவதற்காக முயற்சித்தபோதும்தி லொறியை நிறுத்த வில்லையெனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
மொறவௌ பொலிஸ் சோதனைச் சாவடியில் சாரதி லொறியை நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டபோது அதனைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் கன்னியா பகுதியில் வைத்து சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் முதலாம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பான விசா ரணைகளை மொறவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

No comments:

Post a Comment