HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 26 October 2011

போலீஸ் அதிகாரி வேடம்.

ஒவ்வொரு இடத்துக்கும் அதிகமாக, பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் மாதவன். அவர் மேலும் கூறியதாவது: ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் ஹிட்டுக்குப் பிறகு இந்தியில் அதிக வாய்ப்புகள் வந்தது. ஒரு படத்தை ஏற்றிருக்கிறேன். இதில் முதன்முறையாக பிபாஷா பாஷுவுடன் நடிக்கிறேன். தற்போது லிங்குசாமி இயக்கும் ‘வேட்டை’ படத்தில் நடித்து வருகிறேன். போலீஸ் அதிகாரி வேடம். இதில் ஆர்யா, சமீரா, அமலா பால் என நட்சத்திரப் பட்டாளம் இருக்கிறது. ‘ரன்’ படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்த யூனிட் எப்போதும் ஜாலியாகவே இருக்கும். முன்பு போல் ஏன் அதிகப்படங்களில் நடிக்கவில்லை என்கிறார்கள். இந்தி படத்துக்காக ஒரு ஷெட்யூல், லொகேஷன் ஏதோ ஒரு நாட்டில் இருக்கும். தமிழ்ப் படத்தின் ஷூட்டிங் இங்கு ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும். இதற்காக அதிக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்கு இங்கு என்று அலைவதை விரும்பவில்லை. அதனால் ஒரு நேரத்தில் ஒரு படத்தை மட்டுமே ஒப்புக்கொள் கிறேன். இவ்வாறு மாதவன் கூறினார்.

No comments:

Post a Comment