HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 27 October 2011

பெண்ணிடம் நகை பறிப்பு..... திண்டுக்கல்லில்!


              பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியே வந்த பெண்ணிடமிருந்து ஆறரை பவுன் நகையை இளைஞர் ஒருவர் பறித்துச் சென்றதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் வத்தலகுண்டு காந்திநகரைச் சேர்ந்த கென்னடியின் மனைவி இன்பஎழுச்சி ஜெபமணி (35). இவர் திண்டுக்கல் நாகல் நகர் ஆர்.எஸ்.ரோடில் உள்ள பல்பொருள் அங்காடியில் செவ்வாய் கிழமை பொருள்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் ஜெபமணி அணிந்திருந்த ஆறரை பவுன் நகையைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment