HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 26 October 2011

8 கோழிகளை விழுங்கிய 2 மலைப்பாம்பு....12 அடி...

         காவேரிப்பட்டணத்தில் சேலம் ரோட்டில் சக்தி முனியப்பன் என்பவர் கோழிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிகள் திடீரென அலறின. சக்திமுனியப்பன் கோழி கூண்டுகளுக்கு அருகே சென்று பார்த்தார். அங்கு 2 மலைப்பாம்புகள் கோழிகளை விழுங்கிக் கொண்டிருந்தன. அதிர்ச்சியடைந்த அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்....

வனத்துறை ஊழியர்கள் கணபதி, அமுதநாதன் ஆகியோர் விரைந்து சென்று பாம்புகளை பிடித்தனர். ஒரு பாம்பு 12 அடி நீளமும், மற்றொன்று 10 அடி நீளமும் இருந்தது. 2 பாம்புகளும் தலா 4 கோழிகளை விழுங்கியிருந்தன. மேலும் கோழிகளை விழுங்க முயன்றபோது சிக்கிக் கொண்டன. பின்னர் சாக்குப்பையில் பாம்புகளைப் எடுத்து சென்று வனப்பகுதிக்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment