HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 26 October 2011

13 வயது சிறுவன் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டான்.


இரவு கடையொன்றுள் புகுந்து எடுத்த பணத்தை மறுநாள் காலை நவீன சந்தை மேல்மாடியில் வைத்து எண்ணிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டான்.
 
இது பற்றி மேலும் தெரியவருவதாவது சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள தேநீர்க் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி இரவு நுழைந்த இந்தச் சிறுவன் அங்கிருந்து 13 ஆயிரம் ரூபா பணத்தையும் ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான கிற் காட்டுகளையும் எடுத்துச் சென்றுள்ளான்.
 
இந்தப் பணத்தை சாவகச்சேரி நவீன சந்தை மேல்மாடியில் வைத்து எண்ணிக் கொண்டிருக்கையில் பொலிஸார் கைது செய்து பணத்தையும் கிற் காட்டுகளையும் மீட்டனர்.இந்தச் சிறுவனை நேற்று முன்தினம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தபோது சான்று பெற்ற பாடசாலையொன்றில் அனுமதிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் வழக்கினை எதிர்வரும் நான்காம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

No comments:

Post a Comment