HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 27 October 2011

பாதுகாப்பு ஏற்பாடு..சபரிமலை பக்தர்களுக்கு!!!!!

: சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு 

நீதிபதி ஹரிஹரன் நாயர் கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
பக்தர்களின் நெரிசலை மனதில் கொண்டு இந்த ஆண்டுமுதல் வானங்களை நிறுத்துவது மற்றும் புல்லுமேடு பகுதியில் வாகனங்கள் நுழைவது ஆகியன கட்டுப்படுத்தப்படும்.
புல்லுமேடு வனப் பகுதியில் குடிநீர், மின் விநியோகம் ஆகியன சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்துக்கு வரும் வழியில் உள்ள முக்கிய இடங்களில் பக்தர்களுக்கான தகவல் மையங்கள் அமைக்கப்படும் என்றார் சிவகுமார்.
ஹரிஹரன் நாயர் கமிஷன் நெரிசலைக் கட்டுப்படுத்த 30 நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருந்தது. மகர ஜோதியை பல இடங்களிலிருந்து பக்தர்கள் காண்பதற்கு வழி செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஒரே இடத்தில் பக்தர்கள் கூடுவதால் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படும்.

No comments:

Post a Comment