HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 20 October 2011

சச்சின்.. புது வீடு...


புது வீட்டில் குடியேறிய சச்சினுக்கு ரூ 4.35 லட்சம் அபராத
       புது வீடு கட்டிக் குடியேறிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கு ரூ 4.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை புறநகர் பாந்த்ராவில் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் புது வீடு கட்டிக் குடியேறினார். எனினும் குடிபுகுவதற்கு உரிய சான்றிதழை(ஓசி) மும்பை மாநகராட்சியிடம் இருந்து பெறாமலே அவர் அந்த 5 அடுக்கு மாளிகையில் குடியேறியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தலைமை பொறியாளர் ஆர்.குகநூர் தெரிவித்தார்குடியேறுவதற்கான அனுமதி கேட்டு அவர் விண்ணப்பித்திருந்தது நிலுவையில் உள்ளது. அடுத்த 4 அல்லது 5 தினங்களில் அந்த சான்றிதழ் அவருக்குக் கிடைத்துவிடும் என அவர் தெரிவித்தார்.
மும்பை மாநகர சட்டவிதிகளின்படி குடியேறுவதற்கான சான்றிதழ் இல்லாமல் யாரும் குடியேற முடியாது. அவ்வாறு குடிபுகுந்த சச்சினுக்கு அபராதம் விதிக்குமாறு மும்பை மாநகர கமிஷனரை மாநில அரசு கேட்டுக் கொண்டது.

1 comment:

  1. "மும்பை மாநகர சட்டவிதிகளின்படி குடியேறுவதற்கான சான்றிதழ் இல்லாமல் யாரும் குடியேற முடியாது. அவ்வாறு குடிபுகுந்த சச்சினுக்கு அபராதம் விதிக்குமாறு மும்பை மாநகர கமிஷனரை மாநில அரசு கேட்டுக் கொண்டது."

    எல்லாம் பணம்.....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete