HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 20 October 2011

திருப்பதி கோயிலில்.... ரஜினி...


ரஜினிகாந்த் திருப்பதி கோயிலில் தரிசனம்......


திருமலை, அக்.20: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷ் தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். அதில் லிங்காவுக்கு திருப்பதியில் தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை திருப்பதிக்கு வருகை தந்தார்.
அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் இரவு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் உள்பட குடும்பத்தினர் 16 பேருடன் சுவாமி தரிசனம் செய்தார். சுமார் அரை மணி நேரம் தரிசனம் செய்த அவர்கள் பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு கோயில் துணை அதிகாரி சீனிவாசராஜு மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் ஆகியோர் தீர்த்தப் பிரசாதங்கள் கொடுத்து ஆசீர்வாதம் வழங்கினர். ரஜினிகாந்த்துடன் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் திருப்பதி கோயிலுக்கு வந்திருந்தார்.

No comments:

Post a Comment