
இந்த நிலையில் பாரதிராஜாவின் "அன்னக்கொடியும் கொடி வீரனும்" படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நாயகியாக, இனியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிருந்தது நினைவிருக்கலாம். முதலில் ப்ரியாமணியைத்தான் யோசித்திருந்தார் பாரதிராஜா. பின்னர் வாகை சூட வா படத்தைப் பார்த்த பின்னர் இனியாவை தனது நாயகியாக அவர் தேர்வு செய்தார் என தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் கார்த்திகா அந்த வேடத்திற்கு தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இனியா நிராகரிக்கப்பட்டுள்ளாரா அல்லது கார்த்திகா இன்னொரு ஹீரோயினாக நடிக்கப் போகிறாரா என்பது பற்றிய விரவங்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
labels: karthika,bharathiraja,ko,priyamani,
No comments:
Post a Comment