HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 8 November 2011

பாம்பு கொட்டியது!!தாலி கட்டியவர்?

 பாம்பு கடித்ததால் சிகிச்சை பெற்றுவந்த மணப்பெண்ணை மருத்துவமனையிலேயே மணமகன் திருமணம் செய்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் சவுடேஸ்வரி(19). இவருக்கும், கரூர் அருகேயுள்ள புன்னம்சத்திரத்தை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் பிரகாஷ்(23) என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

நேற்று முன்தினம் இரவு சவுடேஸ்வரியை தாராபுரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்ல ஆயத்தமானார்கள். சவுடேஸ்வரியை திடீரென வீட்டுக்குள் திடீரென வந்த ஒரு பாம்பு கடித்துவிட்டது. அவரை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் சவுடேஸ்வரி அபாய கட்டத்தை தாண்டினார்.

இதற்கிடையே திருமண விழாவில் பங்கேற்பதற்காக தாராபுரம் பெரிய காளியம்மன் கோயிலில் உறவினர்கள் குவிந்தனர். இந்நிலையில், நேற்று காலை 6.15 முதல் 7.15 மணி வரை முகூர்த்தநேரம் என்பதால், மருத்துவமனைக்கே சென்று திருமணத்தை நடத்த உறவினர்கள் முடிவெடுத்தனர். உறவினர்கள் புடைசூழ மணமகன் பிரகாஷ் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சவுடேஸ்வரி கழுத்தில் அவர் தாலி கட்டினார்.


labels:திருப்பூர், தாராபுரம், கரூர், 

No comments:

Post a Comment