HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 8 November 2011

கரு முட்டையை திருடி,கர்ப்பம் தரித்த பெண்?

ஆள் மாறாட்டம் செய்து மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நூதன சம்பவம் புனேயில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்தவர் சந்திரகாந்த் துக்காராம் குஞ்சீர்(51). இவரது மனைவி சாயா. சந்திரகாந்த் புனேயில் பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவி இப்போது சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார்.

போராசிரியர் சந்திரகாந்துக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நன்கு தெரிந்திருந்தும் அந்த பெண் இன்ஜினியர் 2007&ம் ஆண்டு சந்திரகாந்தை  திருமணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் இரு முறை கர்ப்பமானார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. இதற்கு சந்திரகாந்த், அவர் மனைவி மற்றும் ¢அவர்களது மகன் காரணம் என்று அந்த இன்ஜினியர் பெண் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் அடிக்கடி ஏற்பட்ட சர்ச்சையால் விரக்தி அடைந்த பேராசிரியர் கடந்த மார்ச் மாதம் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்துவிட்டார். இந்த நிலையில், பேராசிரியர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் லோனி கல்போர் போலீசார் போராசிரியர் சந்திரகாந்தை கைது செய்தனர். 

அவர் போலீஸ் காவலில் இருந்த போது, எஞ்ஜினியர் பெண் ஆள் மாறாட்டம் செய்து, சந்திரகாந்தின் மனைவி சாயா, பண்டர்பூர் சாலையில் உள்ள குப்தே மருத்துவமனையில் சேமித்து வைத்திருந்த கரு முட்டையை பெற்றுச் சென்று அதனை பயன்படுத்தி கர்ப்பம் தரித்துள்ளார். தன்னை சந்திரகாந்தின் மனைவி சாயா என்று கூறியதுடன், ஒரு ஆணையும் கூடவே அழைத்து சென்று இவர்தான் தன் கணவர் சந்திரகாந்த் என்று கூறி மருத்துவமனை அதிகாரிகளை ஏமாற்றி இந்த முட்டையை பெற்று கர்ப்பம் தரித்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


labels:எஞ்ஜினியர்,போலீஸ்,

No comments:

Post a Comment