HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 3 November 2011

மேல் ஜாமின் கேட்டு முறையீடு

 வழக்கில், கனிமொழிக்கு எப்படியும் ஜாமின் கிடைத்து விடும் என்ற தி.மு.க.,வினரின் நம்பிக்கை, நேற்று வீணானது. ""கனிமொழி உட்பட, சிலரின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., எதிர்க்கவில்லை என்பதை, பெரிய அளவில் பொருட்படுத்த முடியாது. மேலும், பெண் என்பதால், கனிமொழிக்கு சலுகை காட்ட முடியாது,'' எனக் கூறி, கனிமொழி உட்பட, எட்டு பேரின் ஜாமின் மனுக்களை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி, தள்ளுபடி செய்தார். இத்துடன் கனிமொழியின் ஜாமின் மனு நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால், கனிமொழி தரப்பில், அடுத்த வாரம், டில்லி ஐகோர்ட்டில், ஜாமின் கேட்டு மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனிமொழி மற்றும் ஏழு பேரின் ஜாமின் மனு, டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நீதிபதி ஷைனியால் நேற்று நிராகரிக்கப்பட்டது.




labels: cbi,kanimozhi,dmk,

No comments:

Post a Comment