HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Saturday 19 November 2011

நடுத்தர மக்கள் பாவம் கிடு கிடு விலை உயர்வால்!


 நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக லக்னோவில் மேலும் கூறிய அவர், விலைவாசி உயர்வினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறினார். உ.பி.,யில் ராகுல் பிரசாரம் மேற்கொண்ட போது உ.பி.,யை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவில் பிச்சையெடுப்பதாக கூறிய கருத்து பற்றி கேட்டதற்கு, ராகுலின் கருத்து சரியல்ல உ.பியை சேர்ந்தவர்கள் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினர். அவர்கள் கடின உழைப்பு மூலம் பணம் சம்பாதிக்கின்றனர் என கூறினார். அரசியல் லாபத்துக்காக மாயாவதி உபி.,யை பிரிப்பது சரியல்ல என்றும், சிறிய மாநிலங்கள் உருவாக்குவதை தேசியவாத காங்கிரஸ் ஆதரிக்கும் என்றும், பார்லிமென்டில் இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஆதரிப்போம் என்றும், வலுவான லோக்பால் மசோதாவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என்றும் கூறினார்.

labels:lokpal,பார்லிமென்,

No comments:

Post a Comment