HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Monday 7 November 2011

மனநிலை பாதிக்கப்பட்டவரின் நிலை?


சக்திவேல். இவரது மனைவி மகாலட்சுமி (29). இவர் களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 
 
கணவன்-மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டது. சக்திவேல் திடுக்கிட்டு விழித்து பார்த்தார். மகாலட்சுமி கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது கையில் உடைந்த டெட்டால் பாட்டில் இருந்தது. அந்த பாட்டிலால் மகாலட்சுமி கழுத்தை அறுத்தது தெரிய வந்தது.
 
உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மகாலட்சுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.  
 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மகாலட்சுமிக்கு லேசாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் காரணமாக அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
 

labels:ஆஸ்பத்திரி,போலீசார்,

No comments:

Post a Comment