HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Thursday 10 November 2011

"வழக்கறுத்தீஸ்வரர்' மகிழ்மை...

காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சாலையிலிருந்து 6 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மறைந்த முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து ஐயமும், கருத்து வேறுபாடும் எழுந்தன. இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்த்துக் கொள்ளவும், அவற்றின் உண்மைப் பொருளை அறியவும், காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தார். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், "வழக்கறுத்தீஸ்வரர்' என காலம் காலமாக அழைக்கப்படுகிறார்.
தற்போது, கோர்ட் வழக்குகளில் சிக்கித் தவிப்போர், இக்கோவிலில் வந்து வழிபட்டால், வழக்கிலிருந்து விடுதலை பெறுவதாக ஐதீகம். சமீப காலமாக வழக்குகளில் சிக்குவோர், இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவது அதிகரித்து வருகிறது. அதிக அளவில் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் வந்து செல்கின்றனர். நேற்று வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் நடந்தது. அதைக் காண, பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இறைவனை தரிசிப்பதற்காக, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.


labels:kanimozhi,

1 comment:

  1. Watch Sourashtra First Movie egos eno Trailer
    Thank You
    http://www.youtube.com/watch?v=x60jdgLve70

    ReplyDelete