HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 1 November 2011

அண்ணாமலையார் கோயிலில் ஊழல்....


.

கோயிலில் கடந்த 7 ஆண்டுகளாக அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், கோயில் அலுவலத்தில் கோயில்களுக்கான மளிகை மற்றப்பொருட்கள் எங்கு வாங்கப்படுகிறது என தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கர், கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் கோயில் தரப்பில் தகவல் தராமல், இவைகளை தரமுடியாது என்றுள்ளனர். இதனால் கோபமான இந்து முன்னணியினர் கோயிலில் நடக்கும் ஊழல்களைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும். ஊழல் செய்தவர்களை பணியை விட்டு நீக்க வேண்டும் என 15.11.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment