HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Wednesday 2 November 2011

என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கொலை



புதுவை முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 32). என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர். இவர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து விட்டு வெளியே வந்தபோது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 
அவரை கொன்றதாக வேலாயுதம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.   இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். அதில் கொலையாளிகள் திலாசுப்பேட்டையை சேர்ந்த ராமு(வயது 22), வினோபா நகரை சேர்ந்த ராகுல்(22), வி.பி.சிங் நகரை சேர்ந்த ஜெயேந்திரன்(23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
 மேலும் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. கைதானவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுமுகம் எங்களை கொலை செய்ய திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டு அவரை தீர்த்துக்கட்டினோம் என்று போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment