HAI FRIENDS PLEASE CLICK THE ADD.

Tuesday 1 November 2011

விருப்ப ஓய்வு அளிக்கும்.... BSNL.....


நஷ்டத்தை ஈடுகட்ட, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, விருப்ப ஓய்வு அளிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பி.எஸ்.என்.எல்., நிறுவனம். இதனால், அன்றாடப் பணிகளில் தொய்வு ஏற்படும் என தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தனியார் நிறுவனங்களின் வருகைக்கு பின், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சியும், வருவாயும் குறைந்து போனது. இதனால், அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழலை எதிர்த்தும், பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் கூட்டாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில், நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., துவக்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை பி.எஸ்.என். எல்., நிர்வாகம், தொழிற்சங்கங்களுடன் டில்லியில் நடத்தியுள்ளது. இது, பி.எஸ்.என். எல்., ஊழியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment